Posts

Showing posts from 2013

தொடர்கதை:இன்னும் பெயர் வைக்கவில்லை-21-நிறைவுப் பகுதி

21 பிரில்லியண்ட் என்றார் ரதீஸன். அது சரி இந்த ஸ்கிரிஃப்டை அரசியல்வாதி எப்படி அனுமதிச்சாரு. அவருக்கு சந்தேகம் வரலையா என்று கேட்டாள் கயல்விழி அதுவரையில் மௌனமாக கொண்டாடிக்கொண்டு இருந்தவள். மோகன் உடனே, வந்தது. அவன் ஏன் கொலை செஞ்சது நான் தான் ஒத்துகலைன்னு கேட்டாரு. நான் சொன்னேன்  சார் முதல்லே கொலையை ஒப்புகிட்டா கோர்டுக்கு சந்தேகம் வராதான்னு சொல்லி சமாளிச்சேன். அப்புறம்.. ஒரே சாதிக்காரங்கன்னு நீங்க எழுதின வரில அவங்களுக்கு சந்தேகம் வரலையா. ஹாஹா. அது தான் நாம் செஞ்ச அதிர்ஷ்டம். ஆனா அடுத்த வரியை பிடிச்சிட்டாங்க. ஏன் “ அப்புறம் நீ என்னை பயன்படுத்திகிட்டு தப்பிக்க பாக்கறே. என் மனசு சரியில்லையின்னா நீ சொல்ற கதையை கேட்டு நான் ஆடறதுக்கு நான் காதுல ஒன்னும் பூ சுச்தி வைச்சிக்கலைன்னு கத்தினாரு ” இந்த வரி தேவையான்னு கேட்டாரு. அதுக்கு நான், சார் அவன் மனநிலையில்லை சரியில்லைன்னு இங்கே எஸ்டாப்ளீஷ் பண்ணாதான் பின்னாடி அவரை விடுவிக்கலாம் அப்படின்னு சொல்லி சமாளிச்சேன். மத்தக் கதை... மத்தக் கதை எங்கே. இந்த இடத்துல கதிரவன் குணமாயிட்டாரு. மத்த கதையை எழுதினது அவருடைய ஞாபக சக்தியும் ப

தொடர்கதை:இன்னும் பெயர் வைக்கவில்லை-20

20 உங்கள் பெயர். கதிரவன். கதிர்ன்னு கூப்பிடுவாங்க. என்ன படிச்சிருக்கீங்க. எம்எஸ்சி மைக்ரேயாலஜி. எங்க வேலை பாக்கறீங்க. இப்போ வேலையில்லை. வேலை தேடிகிட்டு இருக்கேன். உங்களுக்கு எம்எல்ஏ .......... தெரியுமா ? ஒரு தடவை பாத்திருக்கேன். அவரை நீங்க போன மாசம் 20ம் தேதி அரிவாளால வெட்டினீங்களா இல்லை. என்ன இல்லையா. அப்ப போலீஸ் எதுக்கு உங்களை கைதி பண்ணியிருக்கு. அதை அவங்க கிட்டே தான் கேட்கனும். நீங்க அவரை கொன்னதை பார்த்த சாட்சி இதோ உங்க முன்னே நிற்கிறாரு. வாங்க சரவணன் என்று ஒருவரை அழைத்தார். இவரா நான் கொலை செய்யும் போது பார்த்தது ஆச்சர்யமா இருக்கே. சரவணன் நீங்க கதிரவன் சட்ட மன்ற உறுப்பினரை அரிவாளால் வெட்டும் போது பாத்தீங்களா. ஆமாம் சார். என்ன நடந்ததுன்னு கொஞ்சம் விபரமா சொல்லுங்களேன். அவரு வேகமா ஓடி வந்து எம்எல்ஏ சட்டையை பிடிச்சிகிட்டாரு. கையிலே அரிவாள் வேற இருந்தது. .... ஒரு சாதி பேரை சொல்லி நாம ஒரு சாதிக்காரன் தானேடா உன்னால நம்ம சாதிக்கு என்ன லாபம்னு கத்தினாரு. அப்புறம்... அப்புறம் நீ என்னை பயன்படுத்திகிட்டு தப்பிக்க பாக்கற

தொடர்கதை:இன்னும் பெயர் வைக்கவில்லை-19

19 கதிரவன் அவன் பெற்றோர் காதலி கயல்விழி மோகன், சுரேஷ் அனைவரும் டாக்டர் ரதீஸனின் வீட்டில் குழுமியிருந்தன். கதரிவனின் அப்பா சங்கீதா உணவகத்திலிருந்து அனைவருக்கும் பலகாரங்கள் தரவைத்திருந்தார். எங்கும் மகிழ்ச்சி மயம். கதிரவன் ரதீஸன் முன் நெடஞ்சாணிக்கிடையாக விழுந்து எழுந்தான். ரொம்ப நன்றி சார் எனக்கு வந்த பெரிய ஆபத்திலிருந்து மட்டுமல்லாமல் என்னுடைய வியாதியையும் குணப்படுத்திட்டீங்க. நீங்க மட்டுமில்லாட்டா என்ன ஆயிருக்கும்னே நினைச்சுப் பார்க்க முடியலை. உங்களுக்கு வாழ் நாள் முழுசா கடமை பட்டிருக்கேன் என்றான் நெகிழ்ச்சியுடன். அடேடே அதக்கு நான் மட்டும் காரணமில்லைப்பா. அங்க பாரு சுரேஷ் கோர்டுக்கே போகாம திறமையா வெளியிலேர்ந்தே வழக்காடிய வக்கீல். பிரசுத்திற்கே அனுப்பாம தந்திரமா கதை எழுதிய மோகன், அப்புறம் கயல்விழியோட காதல் உன் மேல வைச்ச நம்பிக்கை உங்க அப்பா அம்மாவோட வேண்டுதல் இப்படி பல காரணங்களும் சேர்ந்து தான் இந்த சாதனையே என்றார் தன்னடக்கத்துடன். சார் நான் செஞ்சது ஒன்னுமே இல்லை. ஜஸ்ட் ஒரு திரி பிடிச்சு கொடுத்தேன், மோகன் சார் தான் அற்புதமா ஒரு கதையை எழுதினாரு. டாக்டர் தான் உங்களை குணப்ப

தொடர்கதை:இன்னும் பெயர் வைக்கவில்லை-18

1 8 ஐயோ இந்த போக்கில் பார்த்தா கொலையிலேர்ந்து கதிர் தப்பிச்சாலும் மனநோய் மருத்துவமனைக்கு நிரந்தர விருந்தாளி ஆகிடுவாரு போலிருக்கே என்று வருந்தினார் ரதீஸன். வேற வழியில்லையா என்று கேட்டான் மோகன். இருந்தா சொல்லுங்க எனக்கு நிஜ குற்றவாளி தப்பிக்கறதுல ஆர்வம் இல்லை. அதே சமயம் கதிரவன் நிரந்தர நோயாளியாக மாறுவதற்கும் விடக்கூடாது என்றான் உறுதியாக. அடுத்த நாள் அந்த காபி கபே டேயில் ஒரு ஓரமான இடத்தில் மூவரும் அமர்ந்தனர். சொல்லுங்க டாக்டர். கதிர் எந்த ஆஸ்பத்திரிக்கெல்லாம் போனாரோ அவரு என்கிட்ட வந்தது உட்பட அந்த பட்டியல் தயார். பலே. ரொம்ப ஃபாஸ்ட். சரி டாக்டர். ஒன்னு சொல்லுங்க மோகன் எழுதி தர கதைப்படி அவரு தானே சட்ட மன்ற உறுப்பினரை கொலை செய்ததா ஏத்துக்கறாரு. அவருக்கு மனநிலை கோளாருன்னு நிரூபிச்சு ஆஸ்பத்திரியில் சேர்க்க சொல்லி ஜட்ஜ் உத்தவிடராரு. ஒரிஜனல் கொலையாளி தப்பிச்சிடரான். இவரும் மரண தண்டனையிலேர்ந்து தப்பிச்சிடராரு. இது தானே அவங்க திட்டம். ஆமாம். உங்க பேஷண்ட எவ்வளவு புத்திசாலி. நான் பாக்கனுமே. பார்க்கலாம் சுரேஷ் நான் ஏற்பாடு பண்றேன். எவ்வளவுன்னா ? அவரு கதையில் வர மாதிரியே மாறிடர

தொடர்கதை:இன்னும் பெயர் வைக்கவில்லை-17

1 7 நீதிபதி வந்து அமர்ந்தவுடன் அரசாங்க தரப்பு வக்கீலை பார்த்து நீங்க அவரை மனநிலை சரியில்லாதவர் அப்படின்னு சொன்னீங்க போன ஸிட்டிங்கல. அங்கேர்ந்து கண்டின்யூ பண்ணுங்க என்றார். அரசாங்க தரப்பு வக்கீல் தொடர்ந்து பேசினார். கதிர் நீங்க நல்ல மன நிலையில் தான் இருக்கீங்கன்னு நீங்களும் இந்த நீதி மன்றமும் ஒப்புக்கிட்டா நீங்க பண்ண கொலைக்கு அதிக பட்ச தண்டனை கிடைக்கும். இல்லையா ஆமாம். எனக்கு வேலை சுலபமாயிடும். இத்தோட என் வாதத்தையும் நான் முடிச்சிக்கலாம். ஆனா நீங்க மன நிலை திடமில்லாதவர்னு எனக்கு தெரியும். உங்களுக்கு உதவி செய்யத் தான் நான் இருக்கேன். ஒன்றும் அறியாமல் நீங்க செய்த கொலைக்கு உங்களுக்கு தண்டனை வாங்கித் தரதுல எனக்கு விருப்பம் இல்லை. அதனால நான் கேட்கற கேள்விகளுக்கு நீங்க சரியா பதில் சொல்லுங்க. அதுக்கப்புறமும் நீங்க உங்க நிலையில் திடமா இருந்தீங்கன்னா நாமை வழக்கை முடிச்சிடலாம். சரியா சரி சார். கேளுங்க. உங்க பெயர் நிஜமாகவே கதிரா அல்லது நீங்க சமீபத்துல படிச்ச கதையில் வந்த கதாபாத்திரமா. நீங்க என்ன கேள்வி கேட்கறீங்க என்று நீதிபதி கேட்டார். லார்ட்ஷிப் குற்றம் சாட்டப்பட்டுள்ள கதிர்

தொடர்கதை:இன்னும் பெயர் வைக்கவில்லை-16

1 6 என்ன மோகன் நாவல் எப்படி வந்துகிட்டு இருக்கு ? ஹாஹா என்ன நாவல் டாக்டர். இதுவா ? ஆமாம். இதுவும் நீங்க எழுதற கதை தானே. என்ன பெயர் வைச்சிருக்கீங்க. ஒரே ஒரு வாசகன். எடிட்டர்ஸ் பல பேர். இதுக்கு என்ன பெயர் வைக்கறது. இன்னும் பெயர் வைக்கவில்லை அப்படின்னு வேணா பெயர் வைக்கலாம். ஹா ஹா. இன்னும் பெயர் வைக்கவில்லை . இதுவே புதுமையான டைட்டில் தான். கொடுங்க படிக்கலாம். ஒரு நிமிடம் அந்த நீதி மன்ற காட்சியை படித்து பார்த்தார். ம்ம். இப்படியே போனா கதையில வர கதிரும் நிஜ கதிரும் இணைஞ்சிருவாங்க. அவரு மன நிலை திடமானவன்னு நீதிபதி நம்பினாருன்னா கொலையும் அவரு தான் செஞ்சாருன்னு ஆயிடுமே. அப்புறம் அந்த அரசியல்வாதி வேற படிச்சி இதை அப்ரூவ் செய்யனுமே என்றார் குழப்பத்துடன். அப்போது தான் உள்ளே நுழைந்த சுரேஷ் என்னை மிஸ் பண்றீங்களா என்று கேட்டான் ஆர்வத்துடன். மோகன் டாக்டரிடமிருந்த தன்னுடைய கதை தாட்களை எடுத்து அவனிடம் நீட்டினான். தானும் அதை ஆமோதித்தவாறே, டாக்டர் சொல்றது சரிதான். அப்புறம் இவரை மனநிலை சரியில்லாதவன்னு நிரூபிக்க நான் உள்ளே நுழைய வேண்டி வரும் . சரி அப்படியா இந்த அடுத்த அத்தியாத்தை பாருங்

தொடர்கதை: இன்னும் பெயர் வைக்கவில்லை-15

1 5 உங்கள் பெயர். கதிரவன். கதிர்ன்னு கூப்பிடுவாங்க. என்ன படிச்சிருக்கீங்க. எம்எஸ்சி மைக்ரேயாலஜி. எங்க வேலை பாக்கறீங்க. இப்போ வேலையில்லை. வேலை தேடிகிட்டு இருக்கேன். உங்களுக்கு எம்எல்ஏ .......... தெரியுமா ? ஒரு தடவை பாத்திருக்கேன். அவரை நீங்க போன மாசம் 20ம் தேதி அரிவாளால வெட்டினீங்களா ஆமாம். எதுக்காக வெட்டினீங்க. இந்த மாதிரி அரசியல்வாதியால ஒரு பிரயோசனமும் இல்லை. சொந்த தொகுதிக்கு கூட ஒரு நல்ல காரியம் செய்யலை. இவங்களையெல்லாம் நடு ரோட்ல வெட்டனும். உங்களுக்கு மனநிலை சரியில்லையா ஏன் சார் என்னை பாத்தா மனநிலையில்லை சரியில்லாத மாதிரியா இருக்கு. நீங்க ஏன் உங்க ஆபீஸ் பொருட்களை போட்டு உடைச்சீங்க. சம்பள உயர்வு கேட்டிருந்தேன். கொடுக்கலை. அதனால கோபிசிகிட்டு உடைச்சிட்டேன். உங்க மனநிலை சரியில்லாதற்காக நீங்க ஏதாவது மருத்துவம் பாத்தீங்களா. சார் எனக்கு மனநிலை சரியாதான் இருக்கு. நான் எந்த டாக்டர்கிட்டேயும் போனதில்லை. வேணும் என் குடும்பத்தாரை கேட்டுப் பாருங்க. என் காதலி கயல்விழியை கேட்டுப்பாருங்க. சரி. சரி. இந்த கொலைக்கு உங்களுக்கு மரண தண்டனை கிடைக