ஞானி பாகம் 5 - 3 தானம்

3. தானம்


தேர்தல் முடிந்திருந்தது. தவறாமல் நானும் என் மனைவியும் வாக்களித்து வந்தோம். என்னால் முடிந்தவரை என் சோம்பேறி நண்பர்களைத் தொலைப்பேசியில் அழைத்து அவர்களையும் வாக்கிட வைத்திருந்தேன். ஒரு பெரிய மகிழ்ச்சி.
சோனியை சந்தித்தேன்.

"சந்தோஷம்" என்றான். ஒரு பெரிய சமுதாயப் புரட்சியை அவன் ஏற்படுத்தியதை அறியாமல். அல்லது எனக்கு அப்படித் தோன்றியது.

"சரி சோனி, உன்கிட்டேயும் ஞானி மாதிரி பல விஷயங்கள் கத்துக்க வேண்டியதிருக்கு. ஆனா எனக்கு என்ன கேட்கனும்னு தெரியலை. எனக்குத் தோனும்போது கேட்கறேன், சரியா" என்று சொன்னேன்.

"சரி, சரி" என்றான். அவனுக்குப் பிச்சையிடும் வழக்கமானவர்களை மறைப்பதாக நினைத்தான் போலும்.
"சோனி, பிச்சைக்காரங்களை நாங்க தான் உருவாக்கறோம்னு தெரிஞ்சிகிட்டேன். அவங்களுக்கு எப்படி உதவி பண்றது. பொது நல சேவை நிறுவனங்களை நம்ப முடியறது இல்லை. நான்-ஃபிராஃபிட் அப்படின்னு சொல்லிகிட்டு வெளிநாட்டிலேர்ந்து நன்கொடை வசூலிக்கிறாங்க. அது நிஜமாவே தேவையானவங்களுக்குப் போய்ச் சேருதான்னா இல்லை தான். என்ன பண்றது" என்று பணிவாக வினவினேன்.

"கடைக்கு போற இல்லை. பிஸ்கெட்டு வாங்கற இல்லை. பத்து ரூபாய் இருக்குமா ஒரு பாக்கெட்டு. வீட்டுக்கு இரண்டு வாங்கற இல்லை. இன்னொரு அஞ்சு பாக்கெட்டு வாங்கி உன் கார்ல வைச்சிக்கோ. வழியில யாரையாவது பார்த்தீன்னா ஒரு பாக்கெட்டு கொடு. அது செய் முதல்லே. காசு கொடுத்து அது அவங்களுக்குத் தான் போய்ச் சேருதான்னு தெரியலையே" என்றான்.
"அடே, இந்த யோசனை நல்லா இருக்கு. நாளையிலேர்ந்து அப்படியே செய்யறேன்".

அவன் முறைத்தான். முறைப்புக்கு பொருள் புரிந்தது.

"இல்லப்பா இல்லே. இன்னிக்கே செய்யறேன்" என்று புன்னகைத்துவிட்டு நகர்ந்தேன். அவன் ஜோலிக்குத் திரும்பினான்.

Comments

Popular posts from this blog