என்னுடைய கதை, கவிதை, கட்டுரை, புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களை உங்களின் பார்வைக்கும் விமர்சனத்திற்கும் கருத்துக்களுக்கும் சமர்ப்பிக்கின்றேன் - மோகன் கிருட்டிணமூர்த்தி
பங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 3
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
பங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 3
3. தானம் தேர்தல் முடிந்திருந்தது. தவறாமல் நானும் என் மனைவியும் வாக்களித்து வந்தோம். என்னால் முடிந்தவரை என் சோம்பேறி நண்பர்களைத் தொலைப்பேசியில் அழைத்து அவர்களையும் வாக்கிட வைத்திருந்தேன். ஒரு பெரிய மகிழ்ச்சி. சோனியை சந்தித்தேன். "சந்தோஷம்" என்றான். ஒரு பெரிய சமுதாயப் புரட்சியை அவன் ஏற்படுத்தியதை அறியாமல். அல்லது எனக்கு அப்படித் தோன்றியது. "சரி சோனி, உன்கிட்டேயும் ஞானி மாதிரி பல விஷயங்கள் கத்துக்க வேண்டியதிருக்கு. ஆனா எனக்கு என்ன கேட்கனும்னு தெரியலை. எனக்குத் தோனும்போது கேட்கறேன், சரியா" என்று சொன்னேன். "சரி, சரி" என்றான். அவனுக்குப் பிச்சையிடும் வழக்கமானவர்களை மறைப்பதாக நினைத்தான் போலும். "சோனி, பிச்சைக்காரங்களை நாங்க தான் உருவாக்கறோம்னு தெரிஞ்சிகிட்டேன். அவங்களுக்கு எப்படி உதவி பண்றது. பொது நல சேவை நிறுவனங்களை நம்ப முடியறது இல்லை. நான்-ஃபிராஃபிட் அப்படின்னு சொல்லிகிட்டு வெளிநாட்டிலேர்ந்து நன்கொடை வசூலிக்கிறாங்க. அது நிஜமாவே தேவையானவங்களுக்குப் போய்ச் சேருதான்னா இல்லை தான். என்ன பண்றது" என்று பணிவாக வினவினேன். "கடைக்கு போற இல்லை
1. தினசரி சமீபத்தில் ஒரு மேற்கத்திய உணவகத்தில் ஏழை சிறுவனை உள்ளே விடவில்லை என்ற செய்தி கேட்டுக் கொதித்துப் போனேன். நானும் அதை முயன்றால் என்ன என்று நினைத்து சோனியை ஒரு நாள் அழைத்துப் போனேன். ஊடகங்களில் கூக்குரல்களை அசட்டை செய்துவிட்டு அந்த உணவகத்தின் பணியாள் என்னுடன் வந்த சோனியை தடுத்து நிறுத்தினான். நான் ஏன் என்று கேட்டேன். அவர் சுகாதாரமாக இல்லை. சரியான உடை உடுத்தவில்லை. அதனால் உள்ளே விடமுடியாது என்று அவன் விளக்கமளித்தான். நான் அவ்வாறு விளக்கி எந்தப் பலகையும் உணவகத்தின் முன் வைக்கவில்லையே என்று விவாதித்தேன். சோனி சாவகாசமாக என் கையில் இருந்த செல்பேசியை என்னிடமிருந்து கேட்டு வாங்கினான். பிறகு யாருக்கோ தொலைபேசியில் அழைப்பு விடுத்தான். இரண்டு நிமிடம் பேசிவிட்டு அந்த உணவகத்தின் பணியாளைப் பார்த்து அந்தப் பெரிய நாளிதழின் பேரை சொல்லி அதன் நிருபர் அவனிடம் பேச விரும்புவதாகக் கூறினான். அதைக் கேட்டது அவன் நடுங்கிப் போய், "உள்ளே போங்க, உள்ளே போங்க" என்று பதறிப்போய் வழிவிட்டான். நான் ஆச்சர்யப்பட்டேன். "என்ன சோனி, அப்படி யாருக்கு போன் போட்டே நீ" என்று ஆர்வ
Comments