ஞானி -5. பயணம்

ஞானி -5. பயணம்

நானும் ஞானியும் நண்பர்களாகிவிட்டோம். பேருந்து நிலையத்தில் நின்றிருந்தேன். ஞானி வந்தான். கடலை உருண்டை தின்றுக்கொண்டே.

“எங்கே போகிறாய்?”

“என் ஊருக்கு பயணம்?”

“உன் ஊருக்கு ஏன் இத்தனை விரைவாக போகிறாய்? உனக்கு காலம் இன்னமும் இருக்கிறதே?”

“என்ன தான் சொல்கிறாய் நீ?”

“பயணம் செய்ய ஏன் பறக்கிறாய்?”

எனக்கு புரிவது போல் இருந்தது.

“புரிகிறது” என்றேன்.

“என்ன?”

“இறப்பைத் தானே சொல்கிறாய் இல்லையா?”

“முட்டாள். இதை அறிய நீ தேவை இல்லை”.

இதைக் கேட்டவுடன் முதன் முறையாக அவனிடம் பாராட்டு பெறலாம் என்றிருந்த எண்ணத்திலும் மண் விழுந்தது.

“பின்னே! ஊருக்கு போவதை பயணம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?”

“இது பயணம் இல்லை. வெறும் அசைவுதான். குளத்தில் கல் எறிந்தால் ஏற்படும் சலனம் போல. இதை பயணம் என்று சொல்லாதே! பயணம் என்பது இறுதியில் போவது தான். புரிகிறதா?”

“கொஞ்சம்”.

“பயணமா?”

“இல்லை. ஊருக்கு போகிறேன். வரட்டுமா?”

அவன் பதில் சொல்லாமல் கிளம்பினான்.

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி