ஞானி - 7. உறக்கம்
ஞானி - 7. உறக்கம்
ஒரு ஞாயிறு மதியம் உணவிற்கு பிறகு நன்றாக தூங்கிக் கொண்டிருந்தேன். நேராக என் படுக்கை அறைக்கே வந்து என்னை எழுப்பினான் ஞானி.
“என்ன வேண்டும் உனக்கு?”
“என்ன செய்கிறாய்?” அவன் என்னிடம் கேட்டான்.
“உனக்கு கண் தெரியவில்லையா? நான் தூங்கிக் கொண்டிருந்தேன்”.
“ஏமாறுகிறாய்?”
“என்ன?”
“ஆம்”.
“யாரிடம்?”
“உன்னிடமே?”
“என்ன? தெளிவாகச் சொல்”.
“உறங்குகிறாய். உறக்கத்தில் கனவு வரும். ஆடம்பரமாய் வாழ்வாய் - கனவில் தான். எழுந்தவுடன் ஏமாறுவாய். கனவில் உன் அன்புக்குரியவன் இறப்பான். நினைவில் அழுவாய்”.
“அதற்காக?”
“யாம் உறங்குவதில்லை”.
“என்ன உண்மையாகவா?”
“ஆம்”.
“பிறகு இரவில் என்ன செய்வாய்?”
“உறங்குவேன்”.
“மறுபடியும் குழப்புகிறாய் நீ”.
“ஆனால் ஏமாறுவதில்லை”.
“கனவு வராமல் இருக்க வேண்டும் என்கிறாயா?”
“இல்லை. கனவுகள் வந்துபோகும். அதை சட்டை செய்வதில்லை. நான் ஞானி. நீ மனிதன். எழுந்து உட்கார். உன்னிடமே நீ ஏமாறாதே!”
என் தூக்கத்தை கெடுத்துவிட்டு அவன் போய்விட்டான். அவன் கதவை திறந்து செல்வது காதில் விழுந்தது. நான் தலையை பிய்த்துக் கொள்ளாத குறை.
ஒரு ஞாயிறு மதியம் உணவிற்கு பிறகு நன்றாக தூங்கிக் கொண்டிருந்தேன். நேராக என் படுக்கை அறைக்கே வந்து என்னை எழுப்பினான் ஞானி.
“என்ன வேண்டும் உனக்கு?”
“என்ன செய்கிறாய்?” அவன் என்னிடம் கேட்டான்.
“உனக்கு கண் தெரியவில்லையா? நான் தூங்கிக் கொண்டிருந்தேன்”.
“ஏமாறுகிறாய்?”
“என்ன?”
“ஆம்”.
“யாரிடம்?”
“உன்னிடமே?”
“என்ன? தெளிவாகச் சொல்”.
“உறங்குகிறாய். உறக்கத்தில் கனவு வரும். ஆடம்பரமாய் வாழ்வாய் - கனவில் தான். எழுந்தவுடன் ஏமாறுவாய். கனவில் உன் அன்புக்குரியவன் இறப்பான். நினைவில் அழுவாய்”.
“அதற்காக?”
“யாம் உறங்குவதில்லை”.
“என்ன உண்மையாகவா?”
“ஆம்”.
“பிறகு இரவில் என்ன செய்வாய்?”
“உறங்குவேன்”.
“மறுபடியும் குழப்புகிறாய் நீ”.
“ஆனால் ஏமாறுவதில்லை”.
“கனவு வராமல் இருக்க வேண்டும் என்கிறாயா?”
“இல்லை. கனவுகள் வந்துபோகும். அதை சட்டை செய்வதில்லை. நான் ஞானி. நீ மனிதன். எழுந்து உட்கார். உன்னிடமே நீ ஏமாறாதே!”
என் தூக்கத்தை கெடுத்துவிட்டு அவன் போய்விட்டான். அவன் கதவை திறந்து செல்வது காதில் விழுந்தது. நான் தலையை பிய்த்துக் கொள்ளாத குறை.
Comments