ஞானி - 8. சந்தேகம்

ஞானி - 8. சந்தேகம்


ஞானியை நானே ஒரு நாள் தேடிச்சென்றேன். அவன் வழக்கமாக செல்லும் பூங்கா கடற்கரை என்று தேடினேன்.

சாலையில் பிடித்தேன்.

“மனிதன் உயிருடன் இருக்கும் போதே ஞானத்தை தேடிவருவது விந்தையாக இருக்கிறதே?” - வழுக்கமான ஞானியின் நையாண்டி.

“என்ன ஞானி எப்படி இருக்கிறாய்?”

“இருப்பது என்ன? உடலில் ஒரு குறையும் இல்லை. இல்லாதது அறிவு ஒன்று தான்”.

“நீ ஞானியல்லவா? உனக்கா அறிவுக்கு பஞ்சம்?”

“என்னைச் சொல்லவில்லை. உன்னைச் சொன்னேன்”.

“இருந்தாலும் உனக்கு தற்பெருமை அதிகம் தான்”.

“இருக்கட்டும். என்ன செய்தி சொல்”.

“எனக்கு ஒரு சந்தேகம். உன்னைக் கேட்கலாம் என்று வந்தேன்”.

“நான் படித்தவன் இல்லை”.

“உனக்கு தெரியும்”.

“அறிவாளி இல்லை நான்”.

“உனக்கு தெரியும்”. மீண்டும் சொன்னேன் நான்.

“மனிதர் ஏன் இப்படி இருக்கிறார்?”

“எப்படி?”

“ஒருவனால் செய்ய முடியாத செயலை முடியும் என்கிறார். அவனே தனக்கு தெரியாது என்றாலும் அவன் மேல் திணிக்கிறார். இறுதியில் அவனால் செய்ய முடியவில்லை என்றால் பழிக்கிறார். காரியம் ஆக வேண்டும் என்றால் மனிதன் எதையும் செய்கிறான்”.

“ஞானி.... “ என்று இழுத்தேன்.

“நான் பழிக்கு ஆளாக விரும்பவில்லை. வருகிறேன்”. சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி