தொடர்கதை: இன்னும் பெயர் வைக்கவில்லை-13


13

டாக்டர் முதல்ல நீங்க கயல்விழி கிட்டே விபரமா பேசி கதிரை எந்தெந்த ஆஸ்பத்திரிக்கெல்லாம் கூட்டிக் கிட்டு போனாங்கன்னு பட்டியல் தயார் பண்ணுங்க. அவரோட போன கம்பெனியில் எல்லாரையும் சந்திச்சு விபரங்கள் சேகரிங்க. அவங்க வீட்டு பக்கத்துவீடு எதிர்த்த வீடு இப்படி எல்லாரையும் சந்திச்சு அவரைப்பத்தின கருத்துக்களை சேகரிங்க. நான் அரசியல்வாதி பக்கத்து கதை, கொலை விபரங்கள், போலீஸ் இன்வால்மென்ட் இப்படி கோணத்துல விபரங்களை சேகரிக்கிறேன். ஆமாம் போன தடவை அவரு போலீஸ்ல மாட்டும்போது கேஸ் ஏதாவது புக் ஆச்சா?

 

அவரு மேல எந்த கேஸூம் புக் ஆயிருக்காது. அதுக்கு முன்னாடியே நான் போயிட்டேன்.

இந்த வாட்டி பொய் கேஸ் தான் போடனும் அவங்க. அப்படி ஆயிருந்தா அதை பொய் கேஸூன்னு நிருபிச்சிடலாம். வேணும்னா இன்னும் ரெண்டு மூணு பொய் கேஸூகளை அந்த போலீஸ் ஸ்டேஷன்லே போட வச்சிட்டு இப்படித்தான் பொய் கேஸூகள் உருவாக்கறாங்கன்னு உடைச்சிடலாம்.

சுரேஷ் அவரு பைத்தியமாக இருக்காருன்னு நீதபதி நினைச்சா அவரு கொலை கேஸூலேர்ந்து தப்பிக்கவாவது வழி இருக்கு. ஒரு வேளை அவர் நல்ல மனநிலையிலதான் இருக்காருன்னு அவங்க நம்பினா அவருக்கு ஆபத்து இல்லையா. ஏன்னா இந்த அரசாங்க தரப்பு வக்கீலை நம்ப முடியாது. கோர்ட்டுக்கு போன பிறகு கொலை நிரூபணம் ஆன பிறகு கதிரை காப்பாத்தாமா விட்டுட்டா?

இல்லை டாக்டர். இதை அவங்க வழியில் போய் பிடிக்கறதுங்கறது புலி வால பிடிச்சிகிட்டு போற மாதிரி. ரொம்ப டேஞ்சரஸ். நாம கேஸை உடைக்கறது மட்டுமில்லாம நிஜ குற்றவாளியையும் பிடிச்சுக் கொடுக்கனும். ஆனா பயப்படாதீங்க நாம எது செஞ்சாலும் நல்லா யோசிச்சுத்தான் செய்வோம். உங்க இரண்டு பேருக்கும் எந்த பாதிப்பும் வராது. அரசியல் பிரச்சனையில் நானும் மாட்டிக்க விரும்பலை.

அப்ப அவங்களுக்கு உதவுங்கன்னு நீங்க சொன்னது?

முதல்ல ஒரு அநாமத்து பேர்ல உங்களுக்கு ஒரு ப்ரீபெய்ட் சிம் வாங்கித் தரேன். அது மூலமா அவங்க கிட்ட பேசுங்க. கட்டாயம் அவங்க ரிக்கார்ட் செய்வாங்க. நீங்களும் ரிக்கார்ட் செய்யுங்க. அவங்க கிட்டே அவங்க எதிர்பார்த்த மாதிரியே அவங்களுக்கு ஒத்துழைப்பு தர்றதா சொல்லுங்க. மோகன் நீங்க அவங்க எதிர்பார்த்த மாதிரியே கதை எழுதுங்க. கையால வேண்டாம். கம்ப்யூட்டரில் எழுதுங்க. இமெயில்ல யாருக்கும் அனுப்ப வேண்டாம். பிரிண்ட் எடுத்துக் கொடுங்க. பிரிண்ட் வீட்டுப் பிரிண்டர்ல வேண்டாம். வெளியேர்ந்து எடுங்க. நீங்க போகாதீங்க. எழுதி முடிச்சோன்னே லாப்டாப்பில் சேஃப் ஏரேஸ் பண்ணிடுங்க. நான் சொல்றமாதிரி எழுதுங்க. ஆனா அவங்க சொன்ன மாதிரி எழுதின மாதிரி இருக்கனும். நான் உங்க இரண்டு பேரையும் சந்திக்கப் போறது இங்கே இல்லை. ஒகே?

அவன் பேசியதை எல்லாம் கண் இமைக்காமல் இருவரும் கேட்டனர். ஒரு மனோதத்துவ நிபுணர். ஒரு கணிணி நிபுணர். இருவரும் சட்டத்திற்கு முன் நெடுஞ்சான்கிடையாக விழுந்திருந்தார்கள். ஆனாலும் இருவரின் ஆர்வத்திற்கு குறைவில்லை. அப்பாவி கதிரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலும் இருவரும் ஒற்றுமையாக இருந்தார்கள். கதையாசிரியருக்கு பல கருக்கள் கிடைத்துக் கொண்டே வந்தன. கதை தொழிற்சாலை 24 மணி நேரம் இயங்கிக் கொண்டே இருந்தது.  

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி