தொடர்கதை: இன்னும் பெயர் வைக்கவில்லை-14


14

கதிர் ஏதோ தொகுதி பிரச்சனையா அவருக்கு மனு கொடுக்க வந்திருக்காரு. சட்ட மன்ற உறுப்பினர் சரியா பேசலை. அடுத்த வாட்டி உனக்கு ஓட்டு போடமாட்டேன்னு கதிர் சொல்லியிருக்காரு. உன்னால ஆனதை பாத்துக்கோன்னு எம்எல்ஏ சொல்லிட்டாரு. அப்பலேர்ந்து அவரை பழி வாங்க வாய்ப்பு தேடி அலைஞ்சிருக்காரு. அவரு காலையில வாக்கிங் போகும்போது அரிவாள் எடுத்து வெட்டிட்டாரு. அந்த நேரத்துல அவரு படிச்சிக்கிட்டு இருந்த புத்தகம் ஒரு அரசியல்வாதியை பழி வாங்கற புத்தகம் மாதிரி இருக்கனும். சரியா என்றார் அந்த அரசியல்வாதியின் கையாள்.

என்ன சார் சொல்றீங்க. இப்ப நான் கதை எழுதி தரனும்னு சொல்றீங்க. கொலை நடந்த சமயம் அவர் ஒரு புத்தகத்தை படிச்சிகிட்டு இருந்தாருன்னு சொல்றீங்க. நானே இணையத்தில் வெளியிடாத புத்தகத்தை அவரு படிச்சாருன்னும் எப்படி சார் நிரூப்பிக்க போறீங்க.

மோகன். நீங்க இப்ப அவருக்கு எழுதி தர வேண்டிய கதை அவரு கோர்டுல கொலை செஞ்சேன்னு ஒத்துக் வேண்டிய கதை. எங்க வக்கீல் சொல்ல போறது அவர் கொலை செஞ்ச நேரத்துல வேறு ஒரு புத்தகத்தை படிச்சிகிட்டு இருந்தாருன்னு. அது தேடனா கிடைச்சிடும். எல்லா மர்ம நாவல்லை கொலை கொள்ளை தானே என்றார் என்னமோ அவர் அரசியலில் எல்லாம் சுத்த சைவம் மாதிரி.

ரத்தீஸன் இடைமறித்தார். சார் கதிர் கொலை பண்ணும்போது அவர் அந்த புத்தகத்தின் பிடியில் இருந்தார்னு சொல்றிங்க. சரி. ஆனா அந்த தொகுதி பிரச்சனையில் அவரு எம்எல்ஏ கிட்ட சண்டை போட்டது கதிர் என்கிற மனுஷனா இருக்கும் போது. இது இடிக்கிறதே. அவரு சண்டையும் கதையில வர ஒரு பாத்திரமா செய்யனும். கொலையும் அந்த பாத்திரமாகவே செய்யனும். ஒன்னும் முழு சுவாதீனத்திலும் இன்னொன்னு மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் செஞ்சதா பேசினா கேஸ் உடைஞ்சிடும்.

என்ன சொல்ல வரீங்க டாக்டர் என்றார் அரசியல்வாதி.

சார் கதிரால உங்களுக்கு பிரயோசனம் இல்லை. நீங்க வேற வழியை பாருங்க.

அதை விடுங்க டாக்டர். நீங்க சொல்ல வந்த விஷயத்தை முதல்ல சொல்லுங்க.

சார். கதிர் சாதாரணமா இருக்கும் போது எம்எல்ஏ கிட்டே சண்டை போட்டு அதே கோபத்துல அவரை கொன்னுட்டாரு. இப்படி போச்சின்னா உங்க ஆளு கொலைலேர்ந்து தப்பிச்சிடுவாரு. கதிரு மாட்டிப்பாரு.

மாட்டிகிட்டு போகட்டுமே. அவரு ஒரு பைத்தியம். அவரால யாருக்கு பிரயோசனம். அவங்க குடும்பத்துக்கு வேணா ஒரு பெரிய தொகை கொடுக்கறோம்.

அது முடியாது சார். அவர் என்னோட பேஷண்ட். அவருக்கு குணப்படத்த முடியாத வியாதி ஒன்னும் இல்லை. அவரு சீக்கிரம் குணமாகி பழைய படி ஆராய்ச்சியில் இறங்குவாரு. இது உறுதி. ஒருத்தரோட வாழ்கையை அழிக்க நான் ஒப்புக்க மாட்டேன்.

சரி விடுங்க. பைத்தியம் சொல்லி கேஸூலேர்ந்து காப்பாத்திட்டா?

அதுக்கு நீங்க சொல்ற வழி சரியாகாது. அவரு புத்தகம் படிச்சதால இன்ஃபூளுயன்ஸ் ஆகி எம்எல்ஏவை கொலை பண்ணதா இருந்தா மட்டுமே அவரை விடுவிக்கலாம்.

சரி அப்படியே பண்ணிடுங்க. அவருக்கு முன் விரோதம் இருந்த மாதிரி சொன்னது வேண்டாம். அவரு ஏதோ ஒரு புத்தகத்தை படிச்சிருக்காரு. அதுல இருந்த எம்எல்ஏவோட பெயரும் இப்ப கொலையான ஆளோடே பெயரும் ஒரே மாதிரி இருக்கட்டும். அவரு மனநிலை சரியில்லாம கொலை பண்ணதா இருக்கட்டும். கொஞ்ச நாள் ஆஸ்பத்திரியில் இருந்துட்டு நானே அவரை ரீலீஸ் பண்ணித் தரேன் என்றார் முடிவாக.

இப்போது மோகன் – அதுல ஒரு பிரச்சனை சார் என்றான்.

என்ன சார் இப்போ பிரச்சனை என்றார் அ.வா. கடுப்புடன்.

கோர்ட்ல நாம சொல்ல போற கதையில் வர புத்தகம் ஏற்கனே பிரசிரிச்ச புத்தகமா இருக்கனும். அதை படிச்சி தான் அவரு கொலை பண்ணியிருக்காருன்னா அதை இனிமே எழுதின புக்கா எப்படி காண்பிக்கிறது. அப்படியே நான் அந்த கதையும் எழுதினா பேக் டேட்டடா இணையத்துல வெளியிடனும். இப்ப இருக்கற தொழில்நுட்பத்துல என்னிக்கி அப்லோட் பண்ணினேன்னு சுலபமா கண்டுபிடிச்சிடுவாங்க. அதுமட்டமல்ல கதிரு அன்னிக்கு இணையத்திலேர்ந்து எடுத்தாரு அப்படிங்கறதுக்கும் ஆதாரம் உருவாக்க வேண்டியிருக்கும். அதெல்லாம் பிரச்சனை. நீங்க முதல்ல அது மாதிரி ஏற்கனவே பப்ளீஷ் ஆன ஒரு புக்கை தேடுங்க, நான் கோர்ட் ஸீன் எழுத ஆரம்பிக்கறேன். நாங்க வரோம்.

ஒரு நிமிஷம் என்று அவர்கள் சொன்னதை காதில் கேட்காத மாதிரி நகர்ந்தார்கள் இருவரும்.


 

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி