தொடர்கதை:இன்னும் பெயர் வைக்கவில்லை-20

20
உங்கள் பெயர்.

கதிரவன். கதிர்ன்னு கூப்பிடுவாங்க.

என்ன படிச்சிருக்கீங்க.

எம்எஸ்சி மைக்ரேயாலஜி.

எங்க வேலை பாக்கறீங்க.

இப்போ வேலையில்லை. வேலை தேடிகிட்டு இருக்கேன்.

உங்களுக்கு எம்எல்ஏ .......... தெரியுமா?

ஒரு தடவை பாத்திருக்கேன்.

அவரை நீங்க போன மாசம் 20ம் தேதி அரிவாளால வெட்டினீங்களா

இல்லை.

என்ன இல்லையா. அப்ப போலீஸ் எதுக்கு உங்களை கைதி பண்ணியிருக்கு.

அதை அவங்க கிட்டே தான் கேட்கனும்.

நீங்க அவரை கொன்னதை பார்த்த சாட்சி இதோ உங்க முன்னே நிற்கிறாரு. வாங்க சரவணன் என்று ஒருவரை அழைத்தார்.
இவரா நான் கொலை செய்யும் போது பார்த்தது ஆச்சர்யமா இருக்கே.
சரவணன் நீங்க கதிரவன் சட்ட மன்ற உறுப்பினரை அரிவாளால் வெட்டும் போது பாத்தீங்களா.

ஆமாம் சார்.

என்ன நடந்ததுன்னு கொஞ்சம் விபரமா சொல்லுங்களேன்.

அவரு வேகமா ஓடி வந்து எம்எல்ஏ சட்டையை பிடிச்சிகிட்டாரு. கையிலே அரிவாள் வேற இருந்தது. .... ஒரு சாதி பேரை சொல்லி நாம ஒரு சாதிக்காரன் தானேடா உன்னால நம்ம சாதிக்கு என்ன லாபம்னு கத்தினாரு.

அப்புறம்...

அப்புறம் நீ என்னை பயன்படுத்திகிட்டு தப்பிக்க பாக்கறே. என் மனசு சரியில்லையின்னா நீ சொல்ற கதையை கேட்டு நான் ஆடறதுக்கு நான் காதுல ஒன்னும் பூ சுச்தி வைச்சிக்கலைன்னு கத்தினாரு.

அப்புறம்...

அவரை ஓங்கி வெட்டிட்டு நான் கதிருடா. மைக்ரோபயாலஜி படிச்சிருக்கேன். ஒவ்வொரு செல்லையும் ஒவ்வொரு மிருகத்துக்கு இரையாக்கிடுவேன்னு சொல்லிட்டு ஓடிட்டாரு.

எதுக்காக வெட்டினீங்க கதிர் சொல்லுங்க என்றார் சற்றே குரலை உயர்த்தி.

சில நிமிடங்கள் மௌனமாக இருந்தான் கதிரவன். சில நிமிடங்கள் சுற்று முற்றும் பார்த்தான். தூரத்தில் கயல்விழி தெரிந்தாள். அவளருகில் சில நபர்கள். யாரும் தெரிந்த முகம் இல்லை. அப்பா அம்மா இன்னும் தூரத்தில் தென்பட்டனர். கயல்விழி உதடுகள் குவித்து ஓசையில்லாமல் கைகள் இரண்டையும் பிரித்தும் இணைத்தும் காட்டினாள். அவன் தன் கையில் இருந்த சிறிய காகித்தை எடுத்துப் பார்த்தான். மெதுவாக படித்தான். பிறகு மீண்டும் மௌனமான்.

சொல்லுங்க கதிர் எதுக்காக கொன்னீங்க.

ஐயா கொஞ்சம் தண்ணி வேணும் என்றான். அவனுக்கு குடிநீர் கொடுக்கப்பட்டது. பிறகு மெதுவாக சரவணனை காண்பித்து நீங்க சொன்னதை மறுபடியும் சொல்லுங்கள் என்றான்.

சரவணன் பொய் சாட்சி தானே. சொன்னதையே மீண்டும் வெட்டி ஒட்டினான்.

நீதிபதி அவர்களே இது ஒரு பொய் வழக்கு. சோடிக்கப்பட்ட வழக்கு என்றான் தீர்க்கமாக.

அரசியல்வாதியின் கையாள் சட்டென்று முகம் மாறினார். மோகனை பார்த்து என்ன நடக்குது என்பது போல சைகை காட்டினார். எழுதியதை பேசாமல் வேறு ஏதாவது உளறப்போகிறானோ என்கிற பயம் அவருக்கு. மோகன் அமைதியாக உதட்டை பிதுக்கி என்ன நடக்கிறது என்று எனக்கும் தெரியிவில்லை என்று செய்கை செய்தான்.

அவன் மீண்டும் பேசத்துவங்கினான்.

ஐயா என் பெயர் கதிரவன்.

அதை தான் சொல்லிட்டீங்களே.

நீதிபதி இடைமறித்து அவரை பேச விடுங்கள் என்றார்.

ஐயா என் பெயர் கதிரவன். நான் மைக்ரோபயாலஜி படிச்சிருக்கேன். இந்த எம் எல் ஏவை நான் ஒரு தடவை கூட பார்த்தது இல்லை.

என்ன இப்பத்தானே பார்த்திருக்கேன்னு சொன்னீங்க – வக்கீலும் தடுமாறிப்போனார்.

சொல்றேன் சார். எனக்கு மன நிலை சரியில்லை. நான் எந்த புத்தகம் படிச்சாலும் அந்த கதாபாத்திரமா மாறிடுவேன். அதனால சில வைத்தியமும் செஞ்சிகிட்டு வரேன். இப்போ கூட பாருங்க இந்த கோர்ட்ல நடக்க வேண்டியதை எனக்கு கதையா எழுதி கொடுத்திருக்காங்க. கதையில வர முக்கிய பாத்திரத்தோட பெயரும் கதிரவன். அவனும் மைக்ரோபயாலஜி படிச்சிருக்கான். என்னோட வீக்கனஸ் தெரிஞ்ச யாரோ தான் இந்த மாதிரி கதையை எழுதி என்னை மாட்டிவிட பார்த்திருக்கனும் என்றான் தெளிவாக.

என்ன சொல்றீங்க. அப்ப ஆரம்பத்துல நீங்க பேசின அஞ்சு நிமிஷம் சுயநினைவில் இல்லையா.

ஆமாம் ஐயா.

இப்ப எப்படி சுயநினைவுக்கு வந்தீங்க.

ஐயா, இவரு சாட்சியம் சொல்லும்போது நாம ரெண்டு பேரும் ஒரு சாதிக்காரங்க அப்படின்னு சொன்னாரு. செத்துப்போன எம்எல்ஏ ... சாதி. நான் வேற ... சாதி. – இது எனக்கு அடிச்ச முதல் அலாரம்.

என் மனசு சரியில்லையின்னா நீ சொல்ற கதையை கேட்டு நான் ஆடறதுக்கு....ன்னு அவரு சொல்லும் போது எனக்கு இரண்டாவது மணி அடிச்சுது. அப்ப தான் அந்த இடைவெளி கிடைச்சுது. கையில் இருந்த பக்கங்களை படிச்சேன். கோட்ல் நடக்கற கதையாக இருந்தது. அதுல என் பேரையை பார்த்தோன்னே எனக்கு புரிஞ்சுது. என்னையே நானாக மாத்தி ஏதோ நடக்கதுன்னு நினைச்சேன். அதனால தான் அவரை மறுபடியும் பேச சொன்னேன்.

நீங்க மனநிலை சரியில்லாதவர்னு எங்களுக்கு தெரியும். அதை சொல்லித்தான் நான் உங்களுக்கு விடுதலை வாங்கிதரதா இருக்கேன். ஆனா கொலை நீங்க தான் செஞ்சீங்க என்றார் வக்கீல் மிகவும் தளர்ந்து போய்.

சார் நான் மன நிலை தெளிவாக இருந்து அந்த கொலை செஞ்சிருந்தேன்னா நான் அந்த சாதிக்காரன்னு சொல்லி கொன்னு இருக்க மாட்டேன். அப்படி ஏதோ கதையின் பாதிப்புல இருந்தேன்னா இப்ப இந்த கதையை எழுதி கொடுத்தது யாரு? என்று கேட்டான் சற்றே வலிமையுடன்.

நீதிபதி குறுக்கிட்டு என்ன நடக்குது இங்கே. பொய் கேஸா. சாட்சியை மேனிபுலேட் பண்றீங்களா. ஹை ஃப்ரோபைல் கேஸூன்னு சொன்ன உடனே சந்தேகம் வந்தது. எப்படிப்பா இவ்வளவு சுலபமா முடியும்னு. கதிரவன் நீங்க மனநிலை சரியில்லை அப்படிங்கறதுக்கு என்ன ஆதாரம்.
சுமார் 20 நிமிடம் கழித்து நீதிபதி, நீங்க கொலை செய்யலை. யாரோ உங்களை இந்த கொலையில் மாட்டிவிட பார்த்திருக்காங்க. யாரு என்றார் யோசனையுடன்.

வக்கீல் தடுமாற்றமாக இருந்தார்.

சார் அதுக்கும் என்கிட்டே பதில் இருக்கு என்றான் கதிரவன்.
வக்கீல் கடுப்புடன் ஏம்பா மனநிலை சரியில்லாதவன்னு சொல்லிட்டே அப்புறம் என்ன வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு கொலையாளி யாருன்னு போலீஸ் பாத்துக்கும் என்றார்.

சார் கவலை படாதீங்க. கொலையாளி யாருன்னு எனக்கு தெரியாது. ஆனா இந்த பொய் சாட்சி யாருன்னு சொல்றேன். இவரு 13ம் வாடு செயலாளர். போன மாசம் இவங்க கட்சி தலைவர் வந்தப்ப ஆளுயர மாலையோட தெருத் தெருவா போஸ்ட்ர் ஒட்டிக்கிடாரு. இவரு ஆளுங்கட்சி. செத்தது எதிர் கட்சி எம்எல்ஏ. சாட்சி சொல்ல வேற வந்திருக்காரு. இந்த நிலைமையில இருக்கு கதை என்றான் கதிரவன் முற்றும் தெளிந்தவனாக.


அப்புறம் கோர்டு ரொம்ப நேரம் நடந்தது. அதெல்லாம் நமக்கு தேவையா. நம்ம ஆளு வெளியே வந்தாச்சு. நீதிபதி காவல்துறைக்கு நிஜ குற்றவாளியை தேடுங்கப்பான்னு உத்தரவு போட்டுட்டாரு. எல்லாம் சுபமே என்று சொல்லி முடித்தான் மோகன். 

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்