தொடர்கதை:இன்னும் பெயர் வைக்கவில்லை-18

18
ஐயோ இந்த போக்கில் பார்த்தா கொலையிலேர்ந்து கதிர் தப்பிச்சாலும் மனநோய் மருத்துவமனைக்கு நிரந்தர விருந்தாளி ஆகிடுவாரு போலிருக்கே என்று வருந்தினார் ரதீஸன்.
வேற வழியில்லையா என்று கேட்டான் மோகன். இருந்தா சொல்லுங்க எனக்கு நிஜ குற்றவாளி தப்பிக்கறதுல ஆர்வம் இல்லை. அதே சமயம் கதிரவன் நிரந்தர நோயாளியாக மாறுவதற்கும் விடக்கூடாது என்றான் உறுதியாக.
அடுத்த நாள் அந்த காபி கபே டேயில் ஒரு ஓரமான இடத்தில் மூவரும் அமர்ந்தனர்.
சொல்லுங்க டாக்டர்.
கதிர் எந்த ஆஸ்பத்திரிக்கெல்லாம் போனாரோ அவரு என்கிட்ட வந்தது உட்பட அந்த பட்டியல் தயார்.
பலே. ரொம்ப ஃபாஸ்ட்.
சரி டாக்டர். ஒன்னு சொல்லுங்க மோகன் எழுதி தர கதைப்படி அவரு தானே சட்ட மன்ற உறுப்பினரை கொலை செய்ததா ஏத்துக்கறாரு. அவருக்கு மனநிலை கோளாருன்னு நிரூபிச்சு ஆஸ்பத்திரியில் சேர்க்க சொல்லி ஜட்ஜ் உத்தவிடராரு. ஒரிஜனல் கொலையாளி தப்பிச்சிடரான். இவரும் மரண தண்டனையிலேர்ந்து தப்பிச்சிடராரு. இது தானே அவங்க திட்டம்.
ஆமாம்.
உங்க பேஷண்ட எவ்வளவு புத்திசாலி. நான் பாக்கனுமே.
பார்க்கலாம் சுரேஷ் நான் ஏற்பாடு பண்றேன். எவ்வளவுன்னா?
அவரு கதையில் வர மாதிரியே மாறிடராரா.
ஆமாம் என்றான் மோகன் நீண்ட நேர அமைதிக்கு பின்பு.
இல்லை என்றார் ரதீஸன்.
என்ன என்று ஆச்சர்யமாக கேட்டான் மோகன். அவனிடம் சொன்னது அப்படித்தானே. இதென்ன புதுக் கதை. நீங்க என்கிட்ட சொல்லாம விட்டது ஏதாவது இருக்கா டாக்டர் என்று நம்பிக்கை இழந்தவாறே.
இல்லை மோகன். உங்க கிட்ட சுரேஷ்கிட்ட சொன்னதெல்லாம் உண்மை. ஆனால் அதில் ஒரு அநாலிஸிஸ் இருக்கு. நல்லா ஆழ்ந்து பார்த்தோம்னா கதிர் ஒரு ஜீனியஸ். அவரு எக்கச்சக்கமா புத்தகங்களை படிச்சிருக்காரு. அதில் படிச்ச விஷயங்களை ஆழமா உள்வாங்கியிருக்காரு. அப்படி இல்லைன்னா நீ ஒரு வக்கீல் அப்படின்னு புக் சொன்னதை வைச்சிகிட்டு அவரு கறுப்பு அங்கி வேணா போட்டுத் திரியலாம். ஆனா சட்ட நுணுக்கங்கள் எப்படி தெரியும் அவருக்கு. நீங்க போலீஸ்ன்னு நான் சொல்றேன். அட்லீஸ்ட் எப் ஐ ஆர்ன்னா என்னன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்க வேண்டாமா.
அப்படின்னா?
அப்படின்னா கதையோட இம்பாக்ட்-தாக்கம் அவரு மேலே போட்ட சட்டை மாதிரி. அவரோட அறிவு அந்த கதாபாத்திரமா அவரை மாற வைக்குது. நாளைக்கு அவரை ஒரு மீனவனா சித்தரிச்சா அவரு மீனவனா மாறலாம். ஆனால் கடல்ல தூக்கிப்போட்டா நீச்சல் தெரியாததால அவரு செத்துடுவாரு.
ஓஹோ. அப்படின்னா ஹி கேன் ரீட் பிட்வீன் த லைன்ஸ். கதையை படிச்சாலும் அதன் உள் அர்த்தம் மூலமா அவருடைய உள் மனதில் தாக்கம் ஏற்படுத்த முடியும் அப்படித்தானே.
அமேஸிங்க சுரேஷ். எக்ஸாக்டலி. நீங்க ஒரு புத்திசாலி. ஆமாம். அப்படி செய்ய முடியும்.
மோகன் முடியை பிய்த்துக் கொள்ளாத குறையாக என்ன சார் பேசிக்கிறீங்க இரண்டு பேரும் என்றான்.
நீங்க எஸ்பிபி மூச்சுவிடமா பாடின பாட்டை கேட்டிருக்கீங்களா என்றான் சுரஷ்.
ஆமாம் என்றான் மோகன் குழப்பத்துடன்.
அது பாலாவோட திறமையா இல்லை வைரமுத்துவோட வரிகளா. எதை எழுதினா மூச்சுவிடமா பாட முடியும்?
எண்ணிவிட மறந்தால் எதற்கோர் பிறவி
இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தரும்
விருந்துகள் படைத்திடும் அமுதமும் அவள் அல்லவா
 என்று ஜோராக பாடினான்.
மோகன் உங்களுக்கு ஒரு சவால். நீங்க எழுத வேண்டிய கதை சமுதாய அக்கறை கொண்ட வேலையில்லாத ஒரு இளைஞன் ஒரு எம்எல்ஏவை கோபத்தினால் கொலை செய்துவிட்டான் – அப்படிங்கற கதை. ஆனா அதுல ஊடுருவியிருக்க வேண்டிய செய்தி அந்த இளைஞனை வேறு ஒரு கும்பல பயன்படுத்தி மாட்டி விடப்பாக்கறாங்கன்ற செய்தி. படிச்சா கதிர் மாத்திரம் தான் புரிஞ்சிக்கனும். இது விசு படத்துல வர மாதிரி என் பொண்டாட்டி என் கண்ணுக்கு மாத்திரம் அழகா இருக்கனும் மத்தவன் கண்ணுக்கு அழகா இருகக்ககூடாது. புரிஞ்சுதா?

ஆக நான் எழுதிய இரண்டும் கோர்ட் ஸீன்லேயும் அவனுக்கு வைத்தியத்தை புகுத்தனும்னு சொல்றீங்க இல்லையா என்றான் வாத்தியார் கேள்வி கேட்டு எனக்கு பதில் தெரிந்துவிட்டது என்று உற்சாகம் அடையும் மாணவன் போல.
பிரஸைஸ்லி என்றான் சுரேஷ்.
அப்படி எழுத முடியுமா மோகன் என்று அப்பாவியாக கேட்டார் ரதீஸன்.
ஒரு பெரிய விஷயத்தை சகஜமாக சொல்லி விட்டான் சுரேஷ். பிரம்மிப்பாக இருந்தது. சவாலாகவும் இருந்தது. யெஸ் முடியும் என்றான் மோகன் நிறைவாக.

மற்றவை நீதி மன்றத்தில் என்றான் செய்தி வாசிப்பாளரை போல. பிறகு வெளியில் ஐந்து ரூபாயில் குடித்திருக்க வேண்டிய காப்பிக்கு 210 ரூபாய் தண்டம் அழுதுவிட்டு சென்றார்கள். 

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி