தொடர்கதை:இன்னும் பெயர் வைக்கவில்லை-16

16
என்ன மோகன் நாவல் எப்படி வந்துகிட்டு இருக்கு?
ஹாஹா என்ன நாவல் டாக்டர். இதுவா?
ஆமாம். இதுவும் நீங்க எழுதற கதை தானே. என்ன பெயர் வைச்சிருக்கீங்க.
ஒரே ஒரு வாசகன். எடிட்டர்ஸ் பல பேர். இதுக்கு என்ன பெயர் வைக்கறது. இன்னும் பெயர் வைக்கவில்லை அப்படின்னு வேணா பெயர் வைக்கலாம்.
ஹா ஹா. இன்னும் பெயர் வைக்கவில்லை. இதுவே புதுமையான டைட்டில் தான். கொடுங்க படிக்கலாம்.
ஒரு நிமிடம் அந்த நீதி மன்ற காட்சியை படித்து பார்த்தார். ம்ம். இப்படியே போனா கதையில வர கதிரும் நிஜ கதிரும் இணைஞ்சிருவாங்க. அவரு மன நிலை திடமானவன்னு நீதிபதி நம்பினாருன்னா கொலையும் அவரு தான் செஞ்சாருன்னு ஆயிடுமே. அப்புறம் அந்த அரசியல்வாதி வேற படிச்சி இதை அப்ரூவ் செய்யனுமே என்றார் குழப்பத்துடன்.
அப்போது தான் உள்ளே நுழைந்த சுரேஷ் என்னை மிஸ் பண்றீங்களா என்று கேட்டான் ஆர்வத்துடன். மோகன் டாக்டரிடமிருந்த தன்னுடைய கதை தாட்களை எடுத்து அவனிடம் நீட்டினான்.
தானும் அதை ஆமோதித்தவாறே, டாக்டர் சொல்றது சரிதான். அப்புறம் இவரை மனநிலை சரியில்லாதவன்னு நிரூபிக்க நான் உள்ளே நுழைய வேண்டி வரும்.
சரி அப்படியா இந்த அடுத்த அத்தியாத்தை பாருங்க என்று மேலும் சில காகிதங்களை நீட்டினான். ஒரு பிரதியானதால் இருவரும் சேர்ந்து படிக்கத் துவங்கினர்.



Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்