தொடர்கதை: இன்னும் பெயர் வைக்கவில்லை - 12

12
அவர்கள் இருவரும் பல மணி நேரம் பேசினர். நடுவில் ரதீஸனின் மனைவி இருமுறை வந்து காபி சாப்டறீங்களா என்று கேட்க தண்ணி மட்டும் கொடுத்துட்டு உள்ளே போ என்ற காட்டமாக கூறியிருந்தார். 

அவருடைய மனைவியும் என்ன பிரச்சனையோ என்று குழப்பத்துடன் உள்ளே சென்று கதவை தாழிட்டுக் கொண்டார்.

அவர்கள் சென்ற பிறகு இருவரும் அமைதியாக இருந்தனர்.

என்ன சார் ஏதோ உங்களுக்கு உதவி பண்ண வந்து பெரிய பிரச்சனையில் மாட்டிக் கிட்டேன என்றான் மோகன்.

இருங்க மோகன் பதட்டப்படாதீங்க. இது மாதிரியெல்லாம் வரும்னு யாரு ஏதிர் பார்த்தது. நம்ம இரண்டு பேருக்கும் நல்ல புத்தி சுவாதீனம் இருக்கும்போதே நாம இந்த பிரச்சனையை பார்த்து கலங்கறோமே, பாவம் கதிர் அவரு இருக்கும் நிலையில் எப்படி இதை சமாளிப்பாரு? சொல்லுங்க.
மன்னிக்கனும் சார். நான் என்னோட வேலை பளுவில் ஏதோ பிரச்சனையில் மாட்டிக்க வேண்டாம்னு சுயநலமா பேசிட்டேன். நீங்க சொல்லறது சரிதான். கதிருக்கு உதவி பண்ணனும். ஆனா இந்த கட்சிக்காரர் அவங்க ஆளுங்க செஞ்ச கொலையை கதிரை ஏத்துக் வைக்கனும்னு சொல்றாரே. அதவும் அவங்க கொலை பண்ணது ஒரு எதிர் கட்சி எம்எல்ஏவை. இது பெரிய விவகாரம் சார். எத்தனை நாள் நாம வேலை வெட்டியில்லாம சுத்தனுமோ என்றான் பதட்டத்துடன்.

கொஞ்சம் அமைதியா இருங்க மோகன். நாம தான் ஒரு நாள் அவகாசம் கேட்டிருக்கோமே. ஏதாவது யோசிக்கலாம் என்றவாறே ஒரு எண்ணை தொலைபேசியில் தட்டி பேசத்துவங்கினார்.

வணக்கம் சுரேஷ். நான் ரதீஸன் பேசறேன். ஒரு சின்ன பிரச்சனை. வர முடியுமா. லேட்டாயிடுத்தே பரவாயில்லையா. மன்னிக்கனும். ரொம்ப நன்றி. வாங்க. காத்திருக்கோம் என்று சொல்லி வைத்தார்.

ஐயோ இன்னும் எத்தனை நேரம் இங்கு இருக்க வேண்டுமோ என்று நினைத்துக் கொண்டு மோகன் யோசனையில் ஆழ்ந்தான். அவன் கணினி தொழில் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல அவனில் இருந்த எழுத்தாளன் இன்னும் ஆழமாக போய் பார்க்கலாமே என்று தூண்டிக் கொண்டிருந்தது. கதையில் மர்மங்களை போட்டுத் தாக்கலாம். நிஜத்தில் சந்திக்க எத்தனை துணிவு வேண்டும் என்று உணர்ந்துக் கொண்டிருந்தான்.

சுரேஷ் – சங்க கால வழக்கறிஞர்களை போல இல்லாமல் இளைமையாக சுறுசுறுப்பாக தென்பட்டான். வெள்ளை நிற போலோ மேல் சட்டை. நீல நிற ஜீன்ஸ் ஒரு மாற்றமாக வெளுத்துப் போகாமல் இருந்தது. காபி பொடி நிறத்தில் ஒரு காலணி. இடது கையில் ஒரு காஸியோ ஜீஷாக் கடிகாரம். அடே பார்த்தவுடன் நான் எழுதும் கதைகளில் வரும் ரமேஷ் போல இருக்கிறானே என்று நினைத்துக் கொண்டான் மோகன்.  

ரத்தீஸன் சொன்னதையெல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டான். பேசுவதை பொறுமையாக கேட்கும் மனிதர்களும் இன்னும் இருக்கின்றார்களா என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டான் மோகன்.

ஸோ நீங்க முடியாதுன்னு சொல்லிப் பார்த்திட்டீங்க ஆனா அவங்க விடறதா இல்லை. அப்படித்தானே.

ஆம். என்றார் ரத்தீஸன்.

ஜென்டிலா மிரட்டிட்டும் போயிருக்காங்க. இல்லையா

ஆம்.

இன்ஸ்பெக்டரும் துணை போறாரு அப்படித்தானே.

ஆம்.

சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு தெளிவாக பேசினான் சுரேஷ். பார்த்தவுடன் அனைவருக்கும் பிடித்துவிடும் அளவிற்கு அவனுடைய பேச்சு மற்றும் பாவனைகள்.

அவங்க மோகனை ஒரு கதை எழுத சொல்றாங்க. அதுல அந்த எம்எல்ஏ மேலே கதிருக்கு கோபம் வர மாதிரி செய்யனும். அவேரே அந்த எம்எல்ஏவை கொலை பண்ணதா ஒத்துக்கனும். அப்படித்தானே.

ஆமாம்.

அப்புறம் கேஸ் கோர்டுக்கு போகும். அங்கே அவரை மனநிலை சரியில்லாதவன்னு சொல்லி விடுவிச்சிடலாம் அப்படின்னு உறுதியளிக்கறாங்க இல்லையா.

ஆமாம்.

இப்ப நமக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்னு இந்த கேஸ் கோர்டுக்கு போயி அவங்க நினைக்கிறமாதிரி முடிவு வந்துட்டா கதிர் நிரந்தரமா கொலையாளின்ற பட்டத்தோட அப்புறம் பைத்தியக்காரன்ற பட்டத்தோடவும் வாழ வேண்டியிருக்கும். அவரை இந்த இக்கட்டான நிலையிலிருந்து காப்பாத்தனும்.

இரண்டாவது நிஜமான குற்றாவாளி தப்பிக்காம பார்த்துக்கனும். இல்லையா.

ரத்தீஸன் சற்றே ஆசுவாசத்துடன் இல்லை சுரேஷ். முதல் பாயிண்ட் சரி. இரண்டாவது நிஜமான குற்றாவளியை பத்தி எங்களுக்கு கவலை இல்லை. அது அரசியல் விவகாரம். அந்த சகதிக்குள்ள மாட்டிக்க நாங்க விரும்பலை. இரண்டாவது முக்கியமான விஷயம் இந்த அரசியல்வாதிங்க கிட்டேர்ந்து எங்க இரண்டு பேரை காப்பாத்தனும். ஏன்னா எனக்கும் பிராக்டீஸ் இருக்கு குடும்பம் இருக்கு. மோகனும் பிஸியான ஆள். அவருக்கும் குடும்பம் இருக்கு. எங்க குடும்பத்தினரும் தொழிலும் பாதிக்காம இருக்கனும். அவங்களுக்கு உதவனாலும் பிரச்சனை உதவாட்டாலும் பிரச்சனை.

அப்ப அவங்களுக்கு உதவுங்க என்றான் சகஜமாக.

என்ன என்று இருவரும் கண்களை விரித்துக் கேட்டனர். 

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி