தொடர்கதை: இன்னும் பெயர் வைக்கவில்லை - 5

5

மோகன் கணினியில் ஏதோ தட்டிக் கொண்டிருந்தான். ஒரு கணிப்பொறி நிறுவனத்தில் முழு நேர வேலை. பகுதி நேரத்தில் இணையத்தில் கதை கவிதை கட்டுரைகள் எழுதுவது. சில நேரத்தில் கருத்துக் களங்களில் சூடான திரிகளில் கருத்துக்கள் எழுதுவதும் கூட. அவன் மனைவி பின்னால் இருந்து குரல் கொடுத்தாள்.

இந்தாங்க காபி. என்ன மறுபடியும் மன்றமா? வேற வேலையில்லை உங்களுக்கு. நாள் முழுக்க ஆபீஸில் இருக்கீங்க. வீ்ட்டுக்கு வந்ததும் மன்றம் மன்றம்னு உக்காந்துக்கிட்டா கடை கன்னிக்கு யாரு போறது.

மன்றம் இல்லை. நாவல் எழுதிகிட்டு இருக்கேன்.

என்ன நாவல்.

கணினிக் காதல்.

அதான் எல்லா தமிழ் மன்றத்திலும் முன்னாடியே எழுதிட்டீங்களே.

அது முன்னாலே எழுதினது தான். இப்ப பிடிஎஃப்பா மாத்தி இஸ்னிப்ஸல போட்டுக் கிட்டு இருக்கேன்.

சட்டென்று கணினியின் பின்னால் வந்து கணினியின் திரையை பார்த்தாள் அவன் மனைவி.

அது என்ன மோகன் கிருட்டிணமூர்த்தி. மோகன் கிருஷ்ணமூர்த்தி தானே. 

ஆமாம் மா. ஆனா இது சுத்த தமிழ். சொல்லும் போது கிருஷ்ணமூர்த்தி. எழுதும்போது கிருட்டிணமூர்த்தி. ஷ வந்து வடமொழிக்காக நாம அடாப்ட் பண்ணிகிட்டது. இப்ப மோஹன் தான் உச்சரிக்கறோம். ஆனா மோகன்னு எழுதறோம்.

அப்ப உங்க நாவல்ல ஷ வர இடத்திலே ட்டி தான் போடுவீங்களா. 

நாவல்ல கதை எழுதும் போது இரண்டு பகுதி இருக்கு. ஒன்னு எழுத்தாளர் எழுதறது. அதுல எத்தனை முடியுமோ அத்தனை சுத்த தமிழ் பயன்படுத்த முயற்சி செய்யறோம். இன்னொரு பகுதி. பேச்சுத் தமிழ். அதுல நாம சுத்த தமிழ் எழுதறோம்னா படிக்கறவங்களால ரிலேட் பண்ண முடியாது. அதனால புஸ்தகம், பொஸ்தகம், கஷ்டம், இஷ்டம் அப்புறம் ஆங்கில வார்த்தைகள் இதையெல்லாம் பயன்படுத்தறோம். அதுக்க காரணம் மக்கள் சாதாரணமா எதை பேசறாங்களோ அதையே படிச்சா படிக்கறவங்களுக்கு அவங்க காதலு வசனம் வந்து விழற மாதிரி இருக்கும். இயற்கையா இருக்கும்.

ஓ அதுல இத்தனை விஷயம் இருக்கா. என்னமோ போங்க. எனக்கு கதை படிக்கறதே பிடிக்காது. 

நல்லதா போச்சு நான் எத்தனை அதிர்ஷ்டம் செஞ்சவன் பாத்தியா என்ற தன் மனைவியை நக்கலடித்துக் கொண்டிருக்கும்போது அவன் கைபேசி ஒலித்தது. ஒரு புதிய எண். யாராவது மன்றத்து நண்பர்களாக இருக்குமோ என்று யோசித்தப்படி எடுத்து ஹலோ நான் மோகன். நீங்க என்றான்.

வணக்கம். மோஹன். நான் டாக்டர் ரதீஸன் பேசறேன். ஸைக்கியாட்ரிஸ்ட். என்னுடைய நண்பர் உங்களை பத்தி சொன்னாரு. இப்பத்தான் உங்களோட என் கைபிடித்தவன் நாவலை படிச்சி முடிச்சேன். நல்லா இருந்தது. இரண்டு பேரோட உணர்வுகள் ஈகோ பாதுகாப்பின்மை பத்தி நல்லா எழுதியிருக்கீங்க. எனக்கு உங்களால ஒரு உதவி ஆகனும். 

சொல்லுங்க டாக்டர் என்னால முடிஞ்சா செய்யறேன் என்றான் மோகன்.

நாளைக்கு மத்யானம் என்னை வந்து பாக்க முடியுமா.

கஷ்டம் டாக்டர். எங்க ஆபீஸ்ல டைம் அண்ட் அட்டென்டன்ஸ் ரொம்ப ஸ்டிரிக்ட். நாளைக்கு சாயந்திரம்?

சரி. வாங்க. இதான் என்னுடைய அட்ரெஸ். நன்றி.

நன்றி டாக்டர் என்று போனை துண்டிக்கும் போது அவனுடைய எழுத்தாளன் மூளை வேகமாக யோசிக்க ஆரம்பித்தது. தலை கால் இல்லாமல் ஒருவர் திடீரென்று உதவி என்கிறார். என்னவாக இருக்கும்.

யாருங்க போன்ல.

யாரோ டாக்டர் ரதீஸனாம். பேர் கேள்விபட்ட மாதிரி இருக்கு. ஏதோ உதவி வேணும்னு சொல்றார்.

அப்படியா. என்ன உதவி.

நாளைக்கு போய்தான் பாக்கனும் என்று யோசனையுடன் இஸ்னிப்ஸ் தளத்தில் அப்லோட் எனும் கோப்பு தரவேற்ற பொத்தானை அமுக்கிவிட்டு கணினியை மூடினான்.

தொடரும்.....

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி