மீண்டும் ஞானி - 10. பொது எது

மீண்டும் ஞானி - 10. பொது எது

ஒரு மாணவன் எழுந்து கேட்ட கேள்வி மிகவும் நகைச்சுவையாக இருந்தது. 

ஞானி, பொது இடங்களான திரையரங்குகள், பேருந்து நிலையங்கள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் கழிப்பிடங்கள் அசுத்தமாக இருக்கின்றனவே. பல இடங்களில் அசிங்கமான படங்களும் சொற்களும் ஏன் எழுதுகின்றனர். இதற்கு என்ன காரணம்.

ஒரு ஆசிரியர் அந்த மாணவனை இடைமறுத்தி, இது என்ன கேள்வி என்று கேட்டார்.

ஞானி, அவரை மீண்டும் இடைமறுத்தி, மாணவன் கேட்ட கேள்வியி்ல் தப்பேதும் இல்லை என்று சொல்லிக் விட்டு என்னிடம் குறைந்த தொனியில் ஏதோ சொன்னான். சரியென்று வெளியே சென்றேன். பிறகு அவன் பேசியதை பிறர் சொல்லக் கேட்டு இங்கு எழுதுகிறேன்.

ஞானி மாணவனை பார்த்து பேசினான்.

மனிதன் வக்கிர புத்திகளை கொண்டவன். மனிதன் தனியாக இருக்கும் போது தான் அவன் மிக கேவலமாக நடந்துக் கொள்கிறான். இதற்கு காரணம் தன்னை யாரும் பார்க்க வில்லை என்பதனால். அவனுடைய வக்கிரமான புத்திகள் தான் தவறான உறவுகளும், பழக்க வழக்கங்களும், ஆபாச புத்தகங்கள், திரைப்படங்கள் என்ற வெளிப்பாடாக வெளிவருகின்றன். பல சமயம் இது போன்ற வக்கிரங்களை அவன் வெளிபடுத்த விரும்பினாலும் சமூகத்தின் கட்டமைப்பு அவனை தன் சொந்த பெயரில் இவற்றை செய்ய தடுக்கிறது. பல முறை அவன் பெயரில்லாமல் இந்த காரியங்களை செய்கிறான்.

மனிதனின் மனதில் அசிகங்கள் தான் அதிகம். அந்த அசிகங்களை அவன் நேரடியாக சம்பந்தப்படாத இடங்களில் அவிழ்த்து விடுகிறான். உதாரணமாக உன் வீடு அசிங்கமாக இருந்தால் உன் வீட்டில் உள்ளவர்கள் தான் அதற்கு பொறுப்பு. அதனால் உன் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்கிறாய். ஆனால் உன் தெரு குப்பை கூளமாக இருந்தால் நான் இல்லை நான் இல்லை என்று யாரும் பொறுப்பேற்பதை தவிர்ப்பீர்கள். 

இப்படி பேசிவிட்டு எதிரில் இருந்த கண்ணாடி கோப்பையிலிருந்த தண்ணீரை எடுத்து மெதுவாக அருந்தினான். மிகவும் மெதுவாக அருந்தினான். அந்த நேரத்தில் அவன் சொன்னபடியே அனைத்து மாணவர்களுக்கும் நான் கடையிலிருந்து வாங்கி வந்த சாக்லெட்டுகளை கொடுத்துவிட்டு மீண்டும் மேடைக்கு சென்று அமர்ந்தேன். 

என்னை பார்த்த ஞானி, நீயும் எடுத்துக் கொள் நண்பா என்றான்.அவன் என்னை நண்பா என்று அழைத்தது எனக்கு நோபல் பரிசு கிடைத்தது போல் இருந்தது. 

நான் ஒரு சாக்லெட் எடுத்து வாயில் போட்டுக் கொண்டு அவனை பார்த்தேன். 

ஒரு சில நிமிடங்கள் அமைதியாக இருந்து விட்டு அரங்கத்தை பார்த்து பேசினான். 

அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து வெளியே செல்லுங்கள் என்றான். அனைவரும் அரங்கத்தின் வாயிலுக்கு சென்றனர்.

ஞானி எழுந்து, இங்கிருக்கும் நாற்காலிகளின் கீழ் இப்போது கொடுத்த சாக்லெட்டின் காகித உறை பார்க்கிறீர்களா என்றான். அனைவரும் வெட்கி தலை குனிந்தனர்.

பெரும்பாண்மையான நாற்காலிகளின் கீழ் காகிதங்கள் கீழே கிடைத்தன. 

அனைவரையும் மீண்டும் வந்து அமரச் சொன்னான்.

கேள்வி கேட்ட மாணவனை எழுந்து நிற்கச் சொன்னான். என்ன புரிந்தது உனக்கு என்று கேட்டான்.

மாணவன், அனைவரும் தங்கள் இனிப்புகளை திறந்து தின்றுவிட்டு காதித உறைகளை கீழே வீசிவிட்டார்கள் என்றான்.

ஹா ஹா, அது தான் இல்லை தம்பி. இவர்கள் யாரும் அவரவர் நாற்காலிகளின் கீழே வீசவில்லை. தன்னுடைய குப்பை பிறருடைய நாற்காலியின் கீழ் வீசியிருக்கினர். இது தான் நீ கேட்ட கேள்விக்கு பதில். 

என்னை எழுந்து நிற்கச் சொன்னான். சட்டென்று என் சட்டைப் பையி்ல் கையை விட்டான். நான் வெளியே செல்லும் போது போடலாம் என்று எடுத்து வைத்த சாக்லெட் ராப்பரை எடுத்தான். அரங்கத்துக்கு காட்டினான்.

இவன் மனிதன். ஞானியாக மாறிக் கொண்டிருக்கும் மனிதன். குப்பையை இவன் இங்கு வீசியிருந்தாலும் இவன் மீது நீங்கள் கொண்ட மதிப்பு மாறியிருக்காது. ஆனால் சமூக சிந்தனையுடன் இதை குப்பைத் தொட்டியில் வீச எடுத்து வைத்திருக்கிறான்.

உன் வயிற்றில் நீ மலம் தக்கவைத்து பிறகு கழிக்கிறாய் அல்லவா. அது போல உன் குப்பைகளையும் கழிக்க வேண்டிய இடத்தில் கழி.

அது மனத்தில் உள்ள குப்பைக்கும் பொருந்தும் என்றான். அரங்கத்தில் கைத்தட்டல் 5 நிமிடம் தொடர்ந்த ஒலித்தது.

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி