ஞானி - 2. வெற்றி
“வெற்றி வெற்றி” என்று கத்திக் கொண்டே வந்தேன்.
எதிர்ப்பட்டான் ஞானி.
“உன்னை பார்க்க முடியாது என்றாயே?” நான் கேட்க சிரித்தான்.
“என்ன வெற்றி?” என்னை அலட்ச்சியப் படுத்திவிட்டு கேட்டான்.
“நான் சென்ற காரியம் வெற்றி” என்றேன்.
“பாவம்”;.
“என்ன?”
“பாவம்”.
“ஏன்”?
“வெற்றி என்று கூச்சலிட்டு செல்வாய். வழியில் இறக்கமாட்டாய் என்பது என்ன நிச்சயம்?”
“அபசகுனமாய் பேசாதே! பைத்தியம் போல்!” என்றேன்.
“யார்?”
“நீ தான்”.
“இல்லை நீ”.
“ஏன்?” என்றேன்.
“பிறகு? சகுனம் யாம் பார்ப்பதில்லை. யாம் ஞானி. நீ மனிதன்”;.
“சென்ற முறை பதில் சொல்லாமல் சென்றுவிட்டாய். ஒரு கேள்வி என்னை உறுத்துகிறது”.
“என்ன கேள்வி?”
“யார் நீ? என்ற கேள்விதான்”;.
“ம்ம்”. சிரித்தான்.
“ஏன் சிரிக்கிறாய்?”
“முட்டாள் நீ”.
“ஏன்?”
“உன் மனதில் எத்தனையோ கேள்விகள். ஒன்றுக்கும் உனக்கு விடை தெரியாது. நீ என்னவென்றால் ஒரே கேள்விதான் என்கிறாய்?”
“என்ன சொல்கிறாய்? எனக்கு புரியவில்லை”.
“ம்ம். முதலில் உன் கேள்விகளுக்கும் உன்னைப்பற்றியும் தெரிந்துக் கொண்டு வா. நான் யாரென்று பிறகு சொல்கிறேன்”.
அவன் திரும்பி நடந்தான்.
Comments