ஞானியும் சோனியும் - ஞானி பாகம் 4 - 4. தங்க திருவோடு
ஞானியும் சோனியும் - ஞானி பாகம் 4 - 4. தங்க திருவோடு
சோனியை பார்க்கும் போதெல்லாம் இவனை சுத்தப்படுத்தினால் என்ன என்று நினைப்பேன். நானும் சுகாதாரமாக இருப்பேன். மற்றவர்களும் சுகாதாரமாக இருப்பதையே விரும்புவேன்.
ஆனால் இவனோ கொசு கடித்து தடித்த கால்கள், அழுக்கேறிய தலைமுடி, கிழிசல்கள் என்று கண்றாவியாக இருந்தான்.
என் அழைப்பை ஏற்று ஒரு நாள் வீட்டிற்கு வந்தான்.
அவனுகென்று சோப்பு, சீப்பு, வேட்டி அரை கை சட்டை என்று எல்லாம் வாங்கி வைத்திருந்தேன். ஒன்றும் பேசாமல் குளித்து முடித்து, சவரம் செய்து, வேட்டி சட்டை அணிந்து வந்து அமர்ந்தான்.
பெரிய இலை வைத்து வகை வகையாய் சமைத்து போட்டாள் என் மனைவி.
போட போட சாப்பிட்டுக் கொண்டே இருந்தான். நாங்கள் நால்வர் சராசரியாக 4 நாட்கள் சாப்பிடும் உணவு உள்ளே போயிருக்கும். என் மனைவி, என்னங்க பகாசூரன் மாதிரி சாப்பிடறான் என்று கேட்க, கம்னு இரு, மைக்ரோ வேவ்ல இன்னும் அரிசி வை என்றேன்.
சாப்பிட்டு முடித்தும் வெற்றிலை பாக்கு கொடுத்தேன். அமைதியாக சாப்பிட்டான்.
ஒரு திருப்பளி குடு என்றான்.
நானும் எடுத்து வந்து கொடுத்தேன்.
அவன் கையில் இருந்த அழுக்கேறிய அந்த திருவோட்டை எடுத்து நெம்பினான். சட்டென்று உள்ளிருந்து ஒரு தங்க திருவோடு வெளிய வந்தது. வியந்து நின்றேன்.
அதை எடுத்து என்னிடம் கொடுத்து, நீ போட்ட சாப்பாட்டுக்காக என்று சொன்னான்.
சோனி, இது தங்கமா. எங்கிருந்து கிடைச்சுது உனக்கு.
அதுவா பெருமாள் கொடுத்தார்.
நிஜமாவா. நான் நம்பலை.
சட்டென்று திரும்பி வாங்கிக் கொண்டான். ஏன் பெருமாள் வந்து கொடுக்க முடியாதா என்று கேட்டான்.
சாத்தியமில்லை.
நீ ஆத்திகன் தானே. உன்னை மாதிரி கடவுளை நம்பாத ஆத்திகனை விட கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகனே மேல். உன்னை போன்ற நம்பிக்கை இல்லாத பக்தர்களால் தான் கடவுளுக்கே கெட்ட பெயர் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.
என் மனைவி, நீங்க வாய் வெச்சிகிட்டு சும்மா இருக்கக்கூடாது. அந்நியாயமா ஒரு 100 கிராம் தங்கம் போச்சே என்றாள்.
நான் செய்வதறியாது நின்றேன்.
சோனியை பார்க்கும் போதெல்லாம் இவனை சுத்தப்படுத்தினால் என்ன என்று நினைப்பேன். நானும் சுகாதாரமாக இருப்பேன். மற்றவர்களும் சுகாதாரமாக இருப்பதையே விரும்புவேன்.
ஆனால் இவனோ கொசு கடித்து தடித்த கால்கள், அழுக்கேறிய தலைமுடி, கிழிசல்கள் என்று கண்றாவியாக இருந்தான்.
என் அழைப்பை ஏற்று ஒரு நாள் வீட்டிற்கு வந்தான்.
அவனுகென்று சோப்பு, சீப்பு, வேட்டி அரை கை சட்டை என்று எல்லாம் வாங்கி வைத்திருந்தேன். ஒன்றும் பேசாமல் குளித்து முடித்து, சவரம் செய்து, வேட்டி சட்டை அணிந்து வந்து அமர்ந்தான்.
பெரிய இலை வைத்து வகை வகையாய் சமைத்து போட்டாள் என் மனைவி.
போட போட சாப்பிட்டுக் கொண்டே இருந்தான். நாங்கள் நால்வர் சராசரியாக 4 நாட்கள் சாப்பிடும் உணவு உள்ளே போயிருக்கும். என் மனைவி, என்னங்க பகாசூரன் மாதிரி சாப்பிடறான் என்று கேட்க, கம்னு இரு, மைக்ரோ வேவ்ல இன்னும் அரிசி வை என்றேன்.
சாப்பிட்டு முடித்தும் வெற்றிலை பாக்கு கொடுத்தேன். அமைதியாக சாப்பிட்டான்.
ஒரு திருப்பளி குடு என்றான்.
நானும் எடுத்து வந்து கொடுத்தேன்.
அவன் கையில் இருந்த அழுக்கேறிய அந்த திருவோட்டை எடுத்து நெம்பினான். சட்டென்று உள்ளிருந்து ஒரு தங்க திருவோடு வெளிய வந்தது. வியந்து நின்றேன்.
அதை எடுத்து என்னிடம் கொடுத்து, நீ போட்ட சாப்பாட்டுக்காக என்று சொன்னான்.
சோனி, இது தங்கமா. எங்கிருந்து கிடைச்சுது உனக்கு.
அதுவா பெருமாள் கொடுத்தார்.
நிஜமாவா. நான் நம்பலை.
சட்டென்று திரும்பி வாங்கிக் கொண்டான். ஏன் பெருமாள் வந்து கொடுக்க முடியாதா என்று கேட்டான்.
சாத்தியமில்லை.
நீ ஆத்திகன் தானே. உன்னை மாதிரி கடவுளை நம்பாத ஆத்திகனை விட கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகனே மேல். உன்னை போன்ற நம்பிக்கை இல்லாத பக்தர்களால் தான் கடவுளுக்கே கெட்ட பெயர் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.
என் மனைவி, நீங்க வாய் வெச்சிகிட்டு சும்மா இருக்கக்கூடாது. அந்நியாயமா ஒரு 100 கிராம் தங்கம் போச்சே என்றாள்.
நான் செய்வதறியாது நின்றேன்.
Comments