ஞானியும் சோனியும் - ஞானி பாகம் 4 - 2. பிச்சைகாரனிடம் பிச்சை
ஞானியும் சோனியும் - ஞானி பாகம் 4 - 2. பிச்சைகாரனிடம் பிச்சை
என் மனைவின் பிறந்த நாள் என்பதால் சிவன் கோவிலுக்கு அழைத்து வந்திருந்தேன். குறுகிய சந்தில் காரை நிறுத்தினேன். என் மனைவி காலை துலாவிக் கொண்டிருந்தாள்.
என்ன பண்றே நீ என்றேன்
செருப்பை வண்டியில் விட்டுட்டு வரேன். ஏன் தண்டத்துக்கு 50 காசு கொடுக்கனும்.
ஐயோ. சரி எக்கெடு கெட்டாவது போ. சீக்கிரம் வா. மழையால ரோடு சகதியாக இருக்கு. கேட்டாத்தானே.
ஏங்க பொறந்த நாளைக்கும் என்னை திட்டறீங்க என்று சலித்துக் கொண்டாள்.
செருப்பை நான் செருப்பு ஸ்டாண்டில் விட்டு டோக்கன் வாங்கிக் கொண்டேன்.
சரி சரி வா என்று அவளை அழைத்தவாறே உள்ளே நுழைந்தோம். நல்ல தரிசனம். இலவச தரிசனம். கூட்டம் அதிகம் இல்லை. இறைவனை பார்க்க வரும் இடத்திலும் ஜருகன்டி பண்ணி தொந்தரவு இல்லாமல் இருந்தது மனதிற்கு இதமாக இருந்தது.
மகிழ்ச்சியுடன் வெளியே வரும்போது எதிர்பட்டான் சோனி.
அவனை பார்த்தும் கண்டுக் கொள்ளாமல் மேல் தொடர்ந்தேன் நடையை.
அவன் நிறுத்தி கை நீட்டினான்.
இரண்டு ரூபாய் சில்லறையாக எடுத்து நீட்டினேன்.
இரண்டு ரூபா தானா
அப்புறம்
இலவச தரிசனம் காசு மிச்சமாச்சுல்லே. போடு என்றான் மிகவும் உரிமையுடன்.
அடப்பாவி நாங்க இலவசம் தரிசனம் செய்த வரையில் நோட் பண்ணி வைத்திருக்கிறானே என்று சொல்லிக் கொண்டேன் மனதில்.
என் மனைவி பிச்சைகாரனிடமெல்லாம் சகவாசமா என்பது போல் பார்த்தாள்.
சரியென்று 5 ரூபாய் எடுத்து நீட்டிவிட்டு விலகினேன்.
நில்லு என்றான்.
என்ன என்று கேட்டேன்.
அவன் பையிலிருந்து பத்து 50 காசுகளை எடுத்து நீட்டினான்.
எதுக்கு என்று கேட்டேன்.
உன் வீட்டுக்காரி 50 காசை மிச்சப்படுத்த செருப்பை காரில் விட்டுட்டு வந்துட்டாளே. இதை வச்சிகிட்டு அடுத்த பத்து தடவைக்காவது செருப்பு ஸ்டாண்டில் செருப்பை போட்டுட்டு போ.
சுட்டெரிக்கும் பார்வையில் அவனை முறைத்தேன்.
முறைக்காதே. பிச்சைகாரனுக்கு இரண்டு ரூபாய் போடறே. அங்க ஸ்டாண்டு வச்சி பொழைப்பை பண்றவனுக்கு 50 காசு போட மாட்டேங்கறே.
பி்ச்சைகாரனிடம் பிச்சை வாங்கும் அளவிற்கு வைத்துவிட்டாளே என்று என் மனைவியை பார்வையால் நொறுக்கி தள்ளிக் கொண்டே அவசரமாக அங்கிருந்து அகன்றேன்.
என் மனைவின் பிறந்த நாள் என்பதால் சிவன் கோவிலுக்கு அழைத்து வந்திருந்தேன். குறுகிய சந்தில் காரை நிறுத்தினேன். என் மனைவி காலை துலாவிக் கொண்டிருந்தாள்.
என்ன பண்றே நீ என்றேன்
செருப்பை வண்டியில் விட்டுட்டு வரேன். ஏன் தண்டத்துக்கு 50 காசு கொடுக்கனும்.
ஐயோ. சரி எக்கெடு கெட்டாவது போ. சீக்கிரம் வா. மழையால ரோடு சகதியாக இருக்கு. கேட்டாத்தானே.
ஏங்க பொறந்த நாளைக்கும் என்னை திட்டறீங்க என்று சலித்துக் கொண்டாள்.
செருப்பை நான் செருப்பு ஸ்டாண்டில் விட்டு டோக்கன் வாங்கிக் கொண்டேன்.
சரி சரி வா என்று அவளை அழைத்தவாறே உள்ளே நுழைந்தோம். நல்ல தரிசனம். இலவச தரிசனம். கூட்டம் அதிகம் இல்லை. இறைவனை பார்க்க வரும் இடத்திலும் ஜருகன்டி பண்ணி தொந்தரவு இல்லாமல் இருந்தது மனதிற்கு இதமாக இருந்தது.
மகிழ்ச்சியுடன் வெளியே வரும்போது எதிர்பட்டான் சோனி.
அவனை பார்த்தும் கண்டுக் கொள்ளாமல் மேல் தொடர்ந்தேன் நடையை.
அவன் நிறுத்தி கை நீட்டினான்.
இரண்டு ரூபாய் சில்லறையாக எடுத்து நீட்டினேன்.
இரண்டு ரூபா தானா
அப்புறம்
இலவச தரிசனம் காசு மிச்சமாச்சுல்லே. போடு என்றான் மிகவும் உரிமையுடன்.
அடப்பாவி நாங்க இலவசம் தரிசனம் செய்த வரையில் நோட் பண்ணி வைத்திருக்கிறானே என்று சொல்லிக் கொண்டேன் மனதில்.
என் மனைவி பிச்சைகாரனிடமெல்லாம் சகவாசமா என்பது போல் பார்த்தாள்.
சரியென்று 5 ரூபாய் எடுத்து நீட்டிவிட்டு விலகினேன்.
நில்லு என்றான்.
என்ன என்று கேட்டேன்.
அவன் பையிலிருந்து பத்து 50 காசுகளை எடுத்து நீட்டினான்.
எதுக்கு என்று கேட்டேன்.
உன் வீட்டுக்காரி 50 காசை மிச்சப்படுத்த செருப்பை காரில் விட்டுட்டு வந்துட்டாளே. இதை வச்சிகிட்டு அடுத்த பத்து தடவைக்காவது செருப்பு ஸ்டாண்டில் செருப்பை போட்டுட்டு போ.
சுட்டெரிக்கும் பார்வையில் அவனை முறைத்தேன்.
முறைக்காதே. பிச்சைகாரனுக்கு இரண்டு ரூபாய் போடறே. அங்க ஸ்டாண்டு வச்சி பொழைப்பை பண்றவனுக்கு 50 காசு போட மாட்டேங்கறே.
பி்ச்சைகாரனிடம் பிச்சை வாங்கும் அளவிற்கு வைத்துவிட்டாளே என்று என் மனைவியை பார்வையால் நொறுக்கி தள்ளிக் கொண்டே அவசரமாக அங்கிருந்து அகன்றேன்.
Comments