ஞானி - 9. சாதி
ஞானி - 9. சாதி
ஞானியை ஒரு நாள் நான் கேட்டேன்.
“நீ என்ன சாதி?”
மௌனமாக இருந்தான்.
“இத்தனை நாளாக நாம் பழகுகிறோம். கேட்க மறந்து விட்டேன். நீ என்ன சாதி?” என்று மீண்டும் கேட்டேன்.
என்னை முறைத்தான்.
“எத்தனை சாதிகள் சொல்” என்று என்னையே பதில் கேள்வி கேட்டான்.
“என்னை கேட்கிறாயா?”
“நீ என்ன கேட்டாய்?”
“சாதி?”
“சாதி?”
“ஆம்”.
“நிச்சயமாய் மனித சாதி இல்லை”.
“நீ?”
“நான் ஞானி. நாம் சாதி பார்ப்பதில்லை. காரணம் சாதிகள் மனிதனால் ஏற்படுத்தப்பட்டது. மனிதனை நாம் மதிப்பதில்லை”.
“மனிதன் என்றால் அவ்வளவு கேவலமா உங்களுக்கு?”
“ஆம்”.
“ஏன்?”
“கேள்வியிலேயே புரியவில்லை? நீங்கள் கேவலமானவர்தான்”.
“அப்படி என்ன கேட்டுவிட்டேன்?”
“சாதி”.
“சாதியை கேட்டால் தப்பா?”
“நீ மனிதன்”. அவன் சென்றுவிட்டான்.
நான் யோசிக்கத் தொடங்கினேன்.
ஞானியை ஒரு நாள் நான் கேட்டேன்.
“நீ என்ன சாதி?”
மௌனமாக இருந்தான்.
“இத்தனை நாளாக நாம் பழகுகிறோம். கேட்க மறந்து விட்டேன். நீ என்ன சாதி?” என்று மீண்டும் கேட்டேன்.
என்னை முறைத்தான்.
“எத்தனை சாதிகள் சொல்” என்று என்னையே பதில் கேள்வி கேட்டான்.
“என்னை கேட்கிறாயா?”
“நீ என்ன கேட்டாய்?”
“சாதி?”
“சாதி?”
“ஆம்”.
“நிச்சயமாய் மனித சாதி இல்லை”.
“நீ?”
“நான் ஞானி. நாம் சாதி பார்ப்பதில்லை. காரணம் சாதிகள் மனிதனால் ஏற்படுத்தப்பட்டது. மனிதனை நாம் மதிப்பதில்லை”.
“மனிதன் என்றால் அவ்வளவு கேவலமா உங்களுக்கு?”
“ஆம்”.
“ஏன்?”
“கேள்வியிலேயே புரியவில்லை? நீங்கள் கேவலமானவர்தான்”.
“அப்படி என்ன கேட்டுவிட்டேன்?”
“சாதி”.
“சாதியை கேட்டால் தப்பா?”
“நீ மனிதன்”. அவன் சென்றுவிட்டான்.
நான் யோசிக்கத் தொடங்கினேன்.
Comments