ஞானியும் சோனியும் - ஞானி பாகம் 4 - 3. திருட்டு

ஞானியும் சோனியும் - ஞானி பாகம் 4 - 3. திருட்டு

பையனை பள்ளியில் விட்டு வரும் போது கோவில் வாசலில் மீண்டும் தென்பட்டான் சோனி. யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான். பேசிக் கொண்டிருந்தவர் தலையில் அடித்துக் கொண்டு போய் விட்டார்.

அருகில் சென்று என்ன சோனி நீ என்ன அப்படி கேட்டுட்டே அவர் தலையில் அடிச்சிகிட்டு போறாரே

ஹா ஹா அதுவா என்று சிரித்துவிட்டு பேசத்துவங்கினான்.

நா அவர்கிட்டே என்ன வேண்டிக்கிட்டே பெருமாள்கிட்டேன்னு கேட்டேன்.
அதுக்கு அவன், நான் என்ன வேண்டிகிட்டா உனக்கு என்னன்னு சொன்னான்.

நீ என்ன வேண்டிக்கிட்டாலும் அது நடக்காது.

ஏன் அப்படி சொல்றே.

பின்னே, வரும்போது வெறுங்காலோட வந்தே. போகும்போது யாரோட செருப்பையில்ல போட்டுட்டு போறே - அப்படின்னு சொன்னேன்.
தலையிலே அடிச்சிகிட்டு செருப்பை விட்டுட்டு போயிட்டான் என்று சொல்லி முடித்தான்.

எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.
சரி அதைவிடு. ஒரு நாள் என் வீட்டுக்கு சாப்பிட வா என்றேன்.
எதுத்கு மயக்க மறந்தை போட்டு என் கண்ணு கிட்னி எல்லாம் புடிங்கிக்க வா

நான் திகைத்து நின்றேன். சமுதாயத்தின் அடிமட்டு நிலையில் இருக்கும் ஒரு பிச்சைகாரன் கூட இலவசமாக செல்வந்தர்கள் அழைத்தால் அதிலும் அவர்கள் காசு பார்க்க ஏதாவது உள்நோக்கம் இருக்கும் என்ற நிலையாகிவிட்டதே. இவன் பார்வையில் செல்வந்தர்கள் எல்லாம் உழைக்காமல் ஊரை ஏமாத்தி பிழைப்பவர்கள் என்று எண்ணம் வந்துவிட்டதே என்று வருந்தினேன்.

சோனி, நான் அப்படி பட்ட ஆளு இல்லேப்பா உழைச்சி தான் முன்னுக்கு வந்திருக்கேன் என்று சொல்லிவிட்டு அகல முயன்றேன்.
என்ன போறே. குடுக்க வேண்டிய இரண்டு ரூபாயை குடுத்துட்டு போ என்றான் உரிமையாக.

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி