ஞானி -4. கண்

ஞானி -4. கண்

ஞானியை மீண்டும் சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தது.

“வீட்டில் அனைவரும் நலமா?” கேட்டான்.

“வீட்டைப் பற்றியெல்லாம் கேட்கிறாயே? நீ மனிதனாக மாறுகிறாயா?” என்றுவிட்டு “நலம்” என்றேன்.

“அவர்கள் மேல் உனக்கு அன்பு அதிகமா?” கேட்டான்.

“ஆம். என் பிள்ளைகள் இருவரும் என் இரண்டு கண்கள”;.

“உன் மனைவி எந்தக் கண்?”

“ஏதாவது ஒன்றை வைத்துக் கொள். இது என்ன கேள்வி?” சிரித்தபடி கூறினேன்.

“சரி. ஒரு கண் ஒரு பிள்ளைக்கு. மற்றொரு கண் மனைவிக்கு. இரண்டாம் பிள்ளைக்கு கொடுக்க கண்ணே இல்லையே?”

ஆகா மறுபடியும் இவனிடம் மாட்டிக் கொண்டேனே என்ற நினைத்துக் கொண்டே “என்னை குழப்பவே நீ வருகிறாயா?” என்று கேட்டேன்.

சிரித்தான். அதே “அடேய் முட்டாள்” என்பது போல ஒரு சிரிப்பு.

“ஏன்?”

“இப்படித்தான் மனிதர் எதை எப்படி பிரித்துக் கொடுப்பது என்பது அறியாமல் திணறுகிறார். கண் மூக்கு என்கிறார். உயிரின் மேலாக நேசிக்கிறேன் என்று வாய் கிழிய பேசுகிறார். வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார். பிறகு சங்கடப்படுகிறார். பாவம்”.

“என்ன?”

“பாவம் நீங்கள்” என்று கூறிவிட்டு எதிர் திசையில் நடந்தான்.

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி