ஞானியும் சோனியும் - ஞானி பாகம் 4 - 7. அட்ராசக்கை
ஞானியும் சோனியும் - ஞானி பாகம் 4 - 7. அட்ராசக்கை
சோனியை சந்தித்து ஞானி கொடுத்த கற்றை ரூபாய் நோட்டுகளை தந்தேன்.
பார்த்தாயா ஞானியின் சாமார்த்தியம் என்றேன் நகைப்புடன்.
என்னிடமிருந்து வாங்கி அதை கோவில் உண்டியலில் போட்டான்.
ஏன் என்று ஆச்சர்யத்துடன் கேட்டேன்.
நான் உழைச்சி சம்பாதிக்காத காசு எனக்கு சேராது என்றான்.
ஹா ஹா பிச்சை எடுப்பது உழைத்து சம்பாதிப்பதா என்று கேட்டேன்.
அதை பத்தி அப்புறம் பேசுவோம் என்றான்.
சரி இப்ப என்ன சொல்றே ஞானியின் சாமார்த்தியம் பற்றி என்றேன் அவனை வெறுப்பேற்றுவது போல.
ச்சோ ச்சோ உன் ஞானியை விட முட்டாள் நான் ஒலகத்தில பாத்ததில்லே என்றான்.
என்ன என்றேன் அதிர்ச்சியுடன்.
ஆமா. மூனு நாளு இது மாதிரி பிச்சை எடுத்திருந்தான்னா பரலோகம் போயிருப்பான் உன் ஞானி.
உன் ஞானியா. ஞானி என்னடான்னா உன் சோனி என்கிறான், இவன் உன் ஞானி என்கிறான். விளையாடறாங்களா என்று மனதில் நினைத்துக் கொண்டே ஏன் என்று வினவினேன்.
பின்னே. மூனு நாளு பிச்சை எடுக்கறது சுலபம். ஒரு வாரம் இருந்திருந்தா செத்தே போயிருப்பான் அவன்.
ஏன்
கிழக்கால காலையில் உட்கார்ந்தா வெயிலு. மறுபடியும் மேற்கால காலையில் உட்கார்ந்தா வெயிலு. வாட்டி வதக்கிடும்.
அப்ப மாதர் சங்கம்.
ஹா ஹா. அது மாசத்துல மூனு நாளு தான் நடக்குது. இந்த வாட்டி இவன் போய் சேர்ந்தான் அங்கே.
அப்ப அரசாங்க அலுவலகம்
லஞ்சம் வாங்கி வாழற பொழப்பு ஒரு பொழப்பாய்யா. அதுல கிடைச்ச பணத்துல எனக்கு பிச்சை கூட வேணாம்.
அப்ப மருத்துவமனை
ஏம்பா இப்ப தான் டென்கு, ப்ளேக், மூளைக்காச்சல், இன்னும் என்னன்னவோ தொத்து வியாதியெல்லாம் வருதே. ஆஸ்பத்திரி குப்பை பக்கத்துல உக்காந்து வியாதிக்காரங்களோட திரிஞ்சா வியாதி வராதா. அப்புறம் எப்படி லீவு போடாமா பிச்சை எடுக்க முடியும்.
திகைத்து நின்றேன்.
இப்ப தெரியுதா ஏன் ஞானி பரலோகம் போயிடுவான்னு சொன்னேன்னு. ஞானிக்கு எல்லாம் தெரியும் தான். ஆனா என் வேலை எனக்கு அவனை விட நல்லா தெரியும். போய் சொல்லு உன் ஞானிகிட்டே.
ஞானி கூக்ளி போட்டு என்னை அவுட் செய்தான் என்று நினைத்தால் சோனி என் முதல் பாலில் சிக்ஸர் அடித்துவிட்டானே என்று நினைத்து சிலையாக நின்றேன்.
சோனியை சந்தித்து ஞானி கொடுத்த கற்றை ரூபாய் நோட்டுகளை தந்தேன்.
பார்த்தாயா ஞானியின் சாமார்த்தியம் என்றேன் நகைப்புடன்.
என்னிடமிருந்து வாங்கி அதை கோவில் உண்டியலில் போட்டான்.
ஏன் என்று ஆச்சர்யத்துடன் கேட்டேன்.
நான் உழைச்சி சம்பாதிக்காத காசு எனக்கு சேராது என்றான்.
ஹா ஹா பிச்சை எடுப்பது உழைத்து சம்பாதிப்பதா என்று கேட்டேன்.
அதை பத்தி அப்புறம் பேசுவோம் என்றான்.
சரி இப்ப என்ன சொல்றே ஞானியின் சாமார்த்தியம் பற்றி என்றேன் அவனை வெறுப்பேற்றுவது போல.
ச்சோ ச்சோ உன் ஞானியை விட முட்டாள் நான் ஒலகத்தில பாத்ததில்லே என்றான்.
என்ன என்றேன் அதிர்ச்சியுடன்.
ஆமா. மூனு நாளு இது மாதிரி பிச்சை எடுத்திருந்தான்னா பரலோகம் போயிருப்பான் உன் ஞானி.
உன் ஞானியா. ஞானி என்னடான்னா உன் சோனி என்கிறான், இவன் உன் ஞானி என்கிறான். விளையாடறாங்களா என்று மனதில் நினைத்துக் கொண்டே ஏன் என்று வினவினேன்.
பின்னே. மூனு நாளு பிச்சை எடுக்கறது சுலபம். ஒரு வாரம் இருந்திருந்தா செத்தே போயிருப்பான் அவன்.
ஏன்
கிழக்கால காலையில் உட்கார்ந்தா வெயிலு. மறுபடியும் மேற்கால காலையில் உட்கார்ந்தா வெயிலு. வாட்டி வதக்கிடும்.
அப்ப மாதர் சங்கம்.
ஹா ஹா. அது மாசத்துல மூனு நாளு தான் நடக்குது. இந்த வாட்டி இவன் போய் சேர்ந்தான் அங்கே.
அப்ப அரசாங்க அலுவலகம்
லஞ்சம் வாங்கி வாழற பொழப்பு ஒரு பொழப்பாய்யா. அதுல கிடைச்ச பணத்துல எனக்கு பிச்சை கூட வேணாம்.
அப்ப மருத்துவமனை
ஏம்பா இப்ப தான் டென்கு, ப்ளேக், மூளைக்காச்சல், இன்னும் என்னன்னவோ தொத்து வியாதியெல்லாம் வருதே. ஆஸ்பத்திரி குப்பை பக்கத்துல உக்காந்து வியாதிக்காரங்களோட திரிஞ்சா வியாதி வராதா. அப்புறம் எப்படி லீவு போடாமா பிச்சை எடுக்க முடியும்.
திகைத்து நின்றேன்.
இப்ப தெரியுதா ஏன் ஞானி பரலோகம் போயிடுவான்னு சொன்னேன்னு. ஞானிக்கு எல்லாம் தெரியும் தான். ஆனா என் வேலை எனக்கு அவனை விட நல்லா தெரியும். போய் சொல்லு உன் ஞானிகிட்டே.
ஞானி கூக்ளி போட்டு என்னை அவுட் செய்தான் என்று நினைத்தால் சோனி என் முதல் பாலில் சிக்ஸர் அடித்துவிட்டானே என்று நினைத்து சிலையாக நின்றேன்.
Comments