ஞானி -12. மாற்றம்
ஞானி -12. மாற்றம்
உணவகம் ஒன்றில் ஞானியை சந்தித்தேன். கடலை உருண்டையுடன் ஒரு காபி.
“நலமா ஞானி?”
“இன்று ஒரு குறையும் இல்லையா?” என் கேள்வியை வழக்கம் போல அலட்ச்சியம் செய்துவிட்டு அவன் கேட்டான்.
“குறைகளுக்கா பஞசம்?”
“என்ன?”
“நீ கேட்பாயா?”
“சொல்”.
“விடுமுறைக்கு அயல்நாடு செல்ல வேண்டுமாம் என் மனைவிக்கு. என் பண முடக்கம் புரிகிறதா அவளுக்கு?”
“யார்?”
“என் மனைவி?”
“யார்? சில வருடங்களுக்கு முன்பு நூல் புடவையில் அடக்கமாக இருந்த அந்தப் பெண்மணியா?”
“ஆம்”.
“ஆனால் நீ மட்டும் மாறவில்லை”.
“இது பாராட்டா இல்லை பாட்டா? என்ன சொல்ல வருகிறாய் நீ?”
“உன்னைச் சூழ்ந்தவர்களின் மகிழ்ச்சிக்காக இத்தனைக்காலமாக உழைக்கிறாய். உன்னையே வதைக்கிறாய் ஆனால்...”
“ஆனால் என்ன?”
“ஆனால் அவர்களை திருப்தி படுத்துகிறாயா என்றால் இல்லை. அனைவரையும் திருப்திபடுத்த முயலுகிறாய் ஆனால் உன்னால் ஒருவரையும் மகிழ்ச்சிபடுத்த முடியவில்லை”.
“அதற்கு என்ன செய்ய?”
“உன்னை திருப்திபடுத்த முயற்சி செய். அது போதும். பகைவர் அதிகரிப்பர். ஆனால் கவலைப்படாதே!”
மௌனமாக இருந்தேன்.
“உனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அது செய். மற்றவரின் அழுத்தத்தினால் எதையும் செய்யாதே. போ!”
“மீண்டும் சந்திப்போம்”; என்று நான் சொன்னதை காதில் வாங்காமல் தன்னுடைய காப்பிக்கு மட்டும் பணம் தந்துவிட்டு விலகினான் ஞானி.
உணவகம் ஒன்றில் ஞானியை சந்தித்தேன். கடலை உருண்டையுடன் ஒரு காபி.
“நலமா ஞானி?”
“இன்று ஒரு குறையும் இல்லையா?” என் கேள்வியை வழக்கம் போல அலட்ச்சியம் செய்துவிட்டு அவன் கேட்டான்.
“குறைகளுக்கா பஞசம்?”
“என்ன?”
“நீ கேட்பாயா?”
“சொல்”.
“விடுமுறைக்கு அயல்நாடு செல்ல வேண்டுமாம் என் மனைவிக்கு. என் பண முடக்கம் புரிகிறதா அவளுக்கு?”
“யார்?”
“என் மனைவி?”
“யார்? சில வருடங்களுக்கு முன்பு நூல் புடவையில் அடக்கமாக இருந்த அந்தப் பெண்மணியா?”
“ஆம்”.
“ஆனால் நீ மட்டும் மாறவில்லை”.
“இது பாராட்டா இல்லை பாட்டா? என்ன சொல்ல வருகிறாய் நீ?”
“உன்னைச் சூழ்ந்தவர்களின் மகிழ்ச்சிக்காக இத்தனைக்காலமாக உழைக்கிறாய். உன்னையே வதைக்கிறாய் ஆனால்...”
“ஆனால் என்ன?”
“ஆனால் அவர்களை திருப்தி படுத்துகிறாயா என்றால் இல்லை. அனைவரையும் திருப்திபடுத்த முயலுகிறாய் ஆனால் உன்னால் ஒருவரையும் மகிழ்ச்சிபடுத்த முடியவில்லை”.
“அதற்கு என்ன செய்ய?”
“உன்னை திருப்திபடுத்த முயற்சி செய். அது போதும். பகைவர் அதிகரிப்பர். ஆனால் கவலைப்படாதே!”
மௌனமாக இருந்தேன்.
“உனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அது செய். மற்றவரின் அழுத்தத்தினால் எதையும் செய்யாதே. போ!”
“மீண்டும் சந்திப்போம்”; என்று நான் சொன்னதை காதில் வாங்காமல் தன்னுடைய காப்பிக்கு மட்டும் பணம் தந்துவிட்டு விலகினான் ஞானி.
Comments