ஞானியும் சோனியும் - ஞானி பாகம் 4 - 6. ஞானி எடுத்த பிச்சை

ஞானியும் சோனியும் - ஞானி பாகம் 4 - 6. ஞானி எடுத்த பிச்சை


வியாழன் ஞானியை சந்தித்தேன். பிச்சை எடுத்து கிடைத்த காசுகளை நோட்டாக மாற்றி ஒரு கற்றை ரூபாய் என் கையில் கொடுத்தான்.

போய் சோனிக்கிட்டே கொடு. அவனுக்கு சராசரியா வர வருமானத்தை விட நாலு மடங்கு.


அப்படியா என்று ஆச்சர்யப்பட்டேன். எப்படி ஞானி முடிஞ்சுது உன்னாலே என்றான். சற்று கறுத்திருந்தான். ஆனால் களைத்திருக்கவில்லை. ஞானி எப்போதுமே சுறுசுறுப்பு தான்.

அப்படி கேள் என்று ஒரு அசத்தல் பார்வை கொடுத்தான். மமதை தலை தூக்கியது. மின்னல் வெட்டில் வந்து சென்றது.

ஒரு காகித்தை எடுத்து கோவிலை வரைந்தான். பிறகு விளக்கம் கொடுத்தான்.

இது தான் கோவில். கோவிலை சுத்தி நான்கு தெருக்கள். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு தெரு.

கிழக்கு தெருவில் ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது. காலையில் அங்கு உட்கார்ந்தால் நல்ல வசூல். பள்ளிக்கு பிள்ளைகளை கொண்டு விடும் பெற்றோர்கள் நாள் தொடங்கும்போது புன்னியம் செய்யலாம் என்று காசு போட்டு போகிறார்கள். காலையில் அங்கு தான் ஜாகை.

அடே

தெற்கு தெருவில் ஒரு ஆஸ்பத்திரி. மக்கள் நோயால் கஷ்டப்பட்டுதான் ஆஸ்பத்திரி வருகிறார்கள். பிச்சைக்காரனுக்கு காசு போட்டால் புன்னியம் என்று தானம் செய்கிறார்கள். Consulting Hours காலை பத்து மணிக்கு மேல். அப்போது அங்கு சென்று அமர்ந்துக் கொண்டேன்.

அப்புறம்

வடக்கு தெருவில் ஒரு மாதர் சங்கம். பணக்கார பெண்கள் வந்து செல்லும் இடம். ஒரு பெண்மணி 5 ரூபாய் போட்டால் 10 ரூபாய் போட்டு தன் கௌரவத்தை ஏற்றிக் கொள்வார்கள் மற்றவர். நல்ல வசூல். மதியத்திற்கு மேல் இங்கு தான் வாசம்.

அடடே

அப்புறம் மேற்கு தெருவில் ஒரு அரசாங்க அலுவலகம். லஞ்சம் வாங்கி பையை நிறைத்துக் கொண்டு வீடு திரும்பும் அதிகாரிகள் அந்த பாவ பணத்தில் இறைவனுக்கும் ஒரு பங்கு கொடுப்பதாக நினைத்து எனக்கு வாரி வழங்கி போவார்கள்.

அட்ரா சக்கை.

உன் சோனியை போல் தப்பான நேரத்தில் தப்பான இடத்தில் உட்கார்ந்தா அவனுக்கு கிடைச்சது தான் எனக்கும் கிடைச்சிருக்கும்.

ஹா ஹா.


இப்போது தெரியுதா ஞானிக்கும் சோனிக்கும் வித்தியாசம் என்றான் வெற்றி புன்னகையுடன்.

Hats Off ஞானி. ஞானின்னா ஞானிதான் என்று களிப்போடு சொன்னேன்.

பறந்து போனான் ஞானி.

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி