ஞானி - 6. மனம்

ஞானி - 6. மனம்

மெதுவாக சாலையில் நடந்து வந்துக் கொண்டிருந்த போது குறுக்கிட்டான் ஞானி.

“என்ன?” என்றான்.
“மனசு சரியில்லை. அதுதான் உலவுகிறேன்” என்றேன்.

சரிதான். அவன் அப்படி சிரிக்கும் போது ஓங்கி ஒரு அறை விடவேண்டும் என்று தோன்றியது. நான் இருந்த மனநிலையில் செய்திருப்பேன். அடக்கிக் கொண்டேன். என்ன இருந்தாலும் மனித சாதியில் இல்லாத என் ஒரே நண்பன் இல்லையா?

“மனசா?”

“ஆம். ஏன்?”

“எங்கிருக்கிறது இந்த மனசு?”

மௌனமானேன். “தெரியவில்லை” என்றேன்.

“என்ன வடிவம் என்றாவது தெரியுமா?”

“ம்ம். இல்லை. தெரியாது”.

அவன் ஏதோ ராகத்தில் பாடினான்.

“முகம் ஒன்றுமறியார் - ஐயோ
முகத்திற்கு அஞ்சுவார்”

“என்ன பாடுகிறாய்?” கத்தினேன்.

“மனம் விதி என்று எதிரே இல்லாத ஒன்றை முக்கியத்துவம் கொடுத்து பேசுகிறாய். எதிரே வரும் எதிரியை வெல்வாய். ஆனால் இல்லாத எதிரியை காணாமலே நடுங்குவாய்!”

“நீ “மனம்” என்ற ஒன்று இல்லவே இல்லை என்கிறாயா?” கேட்டேன்.

“இல்லை. அப்படி சொல்லவில்லை”.

“பின்?”

“அதற்கு அஞ்சுவதில்லை. நான் ஞானி”.

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்